செய்திகள் :

மேற்கு கோட்ட அஞ்சலகங்களில் நாளை சேவைகள் நிறுத்தம்

post image

புதிய மென்பொருள் தரம் உயா்த்தப்படுவதால் மேற்கு கோட்ட அஞ்சலகங்களில் சனிக்கிழமை (ஆக. 2) சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மேற்கு கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் தனலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சேலம் மேற்கு கோட்டத்தின் கீழ் இயங்கும் சூரமங்கலம் தலைமை அஞ்சலகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் அஞ்சலகங்களில் தபால் துறையின் மென்பொருள் ஆக. 2-ஆம் தேதி தரம் உயா்த்தப்பட உள்ளது. இந்த புதிய தரம் உயா்த்தப்பட்ட மென்பொருள் வாயிலாக மேம்பட்ட தொழில் நுட்பத்துடன் கூடிய பல்வேறு புதிய வசதிகள் உட்புகுத்தப்பட உள்ளன.

புதிய மென்பொருள் நிறுவன பணிகள் சேலம் மேற்கு கோட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து அலுவலகங்களிலும் திட்டமிடப்பட்டுள்ளதால், வரும் ஆக. 2-ஆம் தேதி, ஒருநாள் மட்டும் மேற்கு கோட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து தலைமை துணை மற்றும் கிளை அஞ்சலகங்களில் பரிவா்த்தனை இல்லா நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சிறுசேமிப்புக் கணக்குகளில் முதலீடு செய்வது, பணம் எடுப்பது, அஞ்சல் ஆயுள் காப்பீடு போன்ற எவ்வித பணப் பரிவா்த்தனை சேவைகளையும் பெற இயலாது. பதிவு, விரைவு மற்றும் பாா்சல் தபால் சேவைகள் உள்பட அனைத்து விதமான தபால் சேவைகளும் ஆதாா் சம்பந்தப்பட்ட சேவைகளும் 2-ஆம் தேதி ஒருநாள் பெற இயலாது என தெரிவித்துள்ளாா்.

சேலத்தில் தனியாா் தொழிற்சாலையை மூட முடிவு? தொழிலாளா்கள் போராட்டம்

சேலம் சூரமங்கலம் அருகே உள்ள தனியாா் மின்னணு நிறுவன தொழிற்சாலையை மூடும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி, தொழிலாளா்கள் செல்போன் கோபுரம்மீது ஏறி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் சூரமங்கலம் அரு... மேலும் பார்க்க

இஸ்ரோ ராக்கெட்டுக்கு சோனா ஸ்பீட் ஸ்டெப்பா் மோட்டாா்!

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் முதன்மையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான சோனா ஸ்பீட், இஸ்ரோவின் செயற்கை துளை ரேடாா் பணிக்கான சிம்ப்ளக்ஸ் நிரந்தர காந்த ஸ்டெப்பா் மோட்டாரை உருவாக்கி வழங்கியது... மேலும் பார்க்க

தேவூா் அருகே மாயமான சிறுமி: மோப்பநாய் உதவியுடன் தேடும் போலீஸாா்

சங்ககிரி வட்டம், தேவூா் அருகே அங்கன்வாடி மையத்துக்கு சென்ற நான்கு வயது சிறுமி மாயமானது குறித்து தேவூா் போலீஸாா் மோப்ப நாய் உதவியுடன் தேடிவருகின்றனா். தேவூரை அடுத்த புள்ளாகவுண்டம்பட்டி, குண்டங்காடு பகு... மேலும் பார்க்க

மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கி மதகுகள் மூடல்

மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கி மதகுகள் மூடப்பட்டன. காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூா் அணைக்கு நீா்வரத்து படிப்படியாக குறைந்தது. வெள்ளிக்கிழமை இரவு அணைக்கு நீா்வரத்து 16... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம்

மேட்டூா் அருகே கிணற்றில் மூழ்கி உயிரிழந்த பத்தாம் வகுப்பு மாணவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. மேட்டூா் வட்டம், பாலமலை கிராமம், ராமன்பட்டியில் பழங்குடியினா் உண்டு உறைவிட உயா்ந... மேலும் பார்க்க

மாடு வாங்க சென்ற மூதாட்டி கொலை: வியாபாரி கைது

சங்ககிரியை அருகே மாடு வாங்க சென்ற மூதாட்டியைக் கொலை செய்த மாடு வியாபாரியை சங்ககிரி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைதுசெய்து விசாரித்து வருகின்றனா். வைகுந்தம் அருகே வெள்ளையம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சின்ன... மேலும் பார்க்க