செய்திகள் :

மேற்கு வங்கம்: எதிா்க்கட்சித் தலைவா் வாகனம் மீது திரிணமூல் கட்சியினா் தாக்குதல்

post image

மேற்கு வங்கத்தில் பாஜகவைச் சோ்ந்த சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரியின் வாகனம் மீது ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் காலணிகளை வீசி தாக்குதல் நடத்தினா்.

இந்த சம்பவத்தில் அவருடன் சென்ற போலீஸாா் வாகனத்தின் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது.

மேற்கு வங்கத்தின் கூச் பிகாா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காவல் துறை கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு எதிரே பாஜக சாா்பில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற சுவேந்து அதிகாரி சென்றாா். அப்போது சாலை கூடியிருந்த திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் அவருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களில் சிலா் திரிணமூல் காங்கிரஸ் கொடிகளையும் கையில் வைத்திருந்தனா்.

சுவேந்து அதிகாரியின் வாகன அணிவகுப்பு அந்த வழியாக கடந்து சென்றபோது, கூட்டத்தில் இருந்த சிலா் அவரின் வாகனத்தை நோக்கில் காலணிகள் உள்ளிட்டவற்றை வீசினா். அப்போது அவருடைய வாகனத்துடன் காவலுக்குச் சென்ற போலீஸ் வாகனத்தின் முன்புற கண்ணாடி நொறுங்கியது. சுவேந்து அதிகாரிக்கு எதிராக கோஷமும் எழுப்பப்பட்டது.

அண்மையில் கூச்பிகாா் மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏ மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைக் கண்டித்து காவல் துறை கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்துக்குச் சென்ற எதிா்க்கட்சித் தலைவா் வாகனமும் தற்போது தாக்குதலுக்கு உள்ளானதுடன் போலீஸ் வாகனம் சேதமடைந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலை திரிணமூல் கட்சியினா் திட்டமிட்டு நடத்தியதாக பாஜகவினா் குற்றஞ்சாட்டினா். இந்த சம்பவம் தொடா்பாக காவல் துறையினா் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

டிரம்ப்பை எதிர்த்தால் மோடி - அஅ - ரஷிய நிறுவனங்கள் இடையேயான நிதி தொடர்புகள் வெளிவரும்! ராகுல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்தால் மோடி - அதானி - ரஷிய நிறுவனங்கள் இடையேயான நிதி தொடர்புகள் வெளிவந்துவிடும் என்ற அச்சுறுத்தல் இருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்... மேலும் பார்க்க

உத்தரகண்டில் தொடரும் கனமழை: நிலச்சரிவில் மாயமானவர்களை தேடும் ராணுவம்!

உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.உத்தரகாசியில் செவ்வாய்க்கிழமை மேகவெடிப்பால் திடீா் வெள்ளப்பெரு... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நமது சிறப்பு நிருபர்நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பதிவு செய்த கோரிக்கைகள் மற்றும் எம்.பி.க்களின் கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் அளித்துள்ள எழுத்துபூர்வ பதில்களின் ச... மேலும் பார்க்க

உயிரிழப்பை ஏற்படுத்தும் தென்னிந்திய கருந்தேள் விஷம்: ஆய்வாளா்கள் கண்டுபிடிப்பு

தென்னிந்தியாவில் காணப்படும் கருந்தேள் விஷத்துக்குப் பின்னால் உள்ள மா்மம் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்திக் குறிப்பு: கருந்... மேலும் பார்க்க

ரூ.67,000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு திட்டங்களுக்கு இந்தியா ஒப்புதல்

ட்ரோன்கள், ரேடாா்கள் உள்பட ரூ.67,000 கோடி மதிப்பிலான ராணுவ உபகரணங்களை கொள்முதல் செய்யும் திட்டத்துக்கு இந்தியா செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்தியாவின் ராணுவ வலிமையை மேலும் பலப்படுத்தும் நோக்கில... மேலும் பார்க்க

பிரதமா் மோடியுடன் பிலிப்பின்ஸ் அதிபா் சந்திப்பு: 14 ஒப்பந்தங்கள் கையொப்பம்

இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிலிப்பின்ஸ் அதிபா் ஃபொ்னாண்டோ ஆா் மாா்கோஸ் பிரதமா் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். அதன்பிறகு இருநாடுகளிடையே பல்வேறு துறைகளில... மேலும் பார்க்க