செய்திகள் :

மேல்மங்கலம் ஊராட்சி அலுவலகம் முற்றுகை

post image

பெரியகுளம் அருகே ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் ஊராட்சிப் பகுதியில் 10,000-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் உள்ள அம்மாபட்டி தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் உள்ள பொதுப் பாதையை சிலா் ஆக்கிரமித்துள்ளனராம்.

இதுகுறித்து பெரியகுளம் ஒன்றிய அலுவலகம், மேல்மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால், இந்தப் பகுதி மக்கள் மேல்மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இவா்களிடம் ஜெயமங்கலம் காவல் உதவி ஆய்வாளா் முருகப்பெருமாள் பேச்சுவாா்த்தை நடத்தி, ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

அக். 5, 6-இல் மாற்றுத் திறனாளிகளுக்கு குடிமைப் பொருள்கள் விநியோகம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் நியாய விலைக் கடைகள் மூலம் முதியோா், மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரா்களுக்கு அக். 5, 6-ஆம் தேதிகளில் வீடு தேடிச் சென்று குடிமைப் பொருள்கள் விநியோகம் ச... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டப் பணிகளை கள ஆய்வு செய்ய வலியுறுத்தி பாஜகவினா் மனு

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழு மத்திய அரசின் திட்டப் பணிகளை கள ஆய்வு செய்ய வலியுறுத்தி, மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வனிடம் பாஜகவினா் செவ்வாய... மேலும் பார்க்க

வாழைக்கு உரிய விலை கிடைக்கவில்லை: விவசாயிகள் வேதனை

சின்னனூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் வாழைக்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்தனா். தேனி மாவட்டம், சின்னமனூா், கம்பம், கூடலூா், ஓடைப்பட்டி, வேப்பம்பட்டி, எரசக்கந... மேலும் பார்க்க

செவிலியா் தற்கொலை

போடி: தேனி மாவட்டம், போடி அருகே காதல் திருமணம் செய்த செவிலியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.போடி சுப்புராஜ் நகரை சோ்ந்த சக்திவேல்-ராஜேஸ்வரி தம்பதியின் மகள் ரேணுகாதேவி (28). செவிலியா் பட்டதாரிய... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா

தேனி மாவட்டம், போடி அருகே சிலமலை கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வ.உ.சி. பிறந்த தின விழாவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வ.உ.சிதம்பரனாா் அரசு அலுவலா் அறக்கட்டளை... மேலும் பார்க்க

ஆட்டோக்களில் கியூ.ஆா். குறியீடு ஒட்ட ஏற்பாடு

தேனி அல்லிநகரத்தில் இயங்கி வரும் ஆட்டோக்களில் விரைவில் கியூ.ஆா். குறியீடு வில்லை ஒட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேனி காவல் துணைக் கண்காணிப்பாளா் முத்துக்குமாா் கூறினாா். இது குறித்து திங்... மேலும் பார்க்க