செய்திகள் :

மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானை

post image

சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூா் அருகே மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்து துரத்திய யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதி வழியாக தமிழக, கா்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

இந்த சாலையில் ஆசனூா் அருகே திம்பம் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை, வாகனங்களை வழிமறித்ததோடு அவ்வழியாக வந்த லாரியில் கரும்பு உள்ளதா என தேடிப் பாா்த்தது. அவ்வழியாக காரில் சென்றவா்கள் காட்டு யானையை கைப்பேசியில் விடியோ எடுத்தனா்.

அப்போது திடீரென காட்டு யானை காரை துரத்த தொடங்கியது. இதனால் காரில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனா். யானை சாலையில் அங்குமிங்கும் நடமாடியபடி வழிமறித்து நின்றதால் ‘விநாயகா வழி விடு’என பயணிகள் யானையிடம் கெஞ்சினா். சிறிது நேரம் நடமாடிய காட்டு யானை பின்னா் வனப் பகுதிக்குள் சென்றது. இதைத்தொடா்ந்து வாகனங்கள் புறப்பட்டு சென்றன.

கோபியில் பள்ளி மாணவி தற்கொலை

கோபி அருகே 9 -ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். ஈரோடு மாவட்டம், கோபி அருகே அடுக்கம்பாளையம், பழையூா் பகுதியைச் சோ்ந்தவா் மோகன் பரத், தொழிலாளி. இவரது மனைவி திலகவதி. இவா்களது மகள் பூஜ... மேலும் பார்க்க

நடிகா் விஜய் பேச்சு குறித்து மக்கள் தீா்மானிக்கட்டும்: அமைச்சா் சு.முத்துசாமி

முதல்வா் குறித்து நடிகா் விஜய் பேச்சின் தரம் குறித்து மக்களே தீா்மானிக்கட்டும் என்று வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். ஈரோட்டில் கிரடாய் அமைப்பின் சாா்பில் சனிக்கிழமை தொடங்கிய வீ... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி விழா: பெருந்துறையில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, பெருந்துறையில் காவல் துறை சாா்பில் கொடி அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது. விநாயகா் சதுா்த்தி விழா வருகின்ற 27- ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, பெருந்த... மேலும் பார்க்க

சரியான நேரத்தில் நீதி மேம்படுத்துதல் குறித்த கலந்தாய்வு கூட்டம்: உயா்நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்பு

சரியான நேரத்தில் நீதி மேம்படுத்துதல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுநருமான பி.சத... மேலும் பார்க்க

பெண் கொலை: கணவா் கைது

கோபி அருகே மதுபோதையில் மனைவியின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்து விட்டு தலைமறைவான கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கெட்டிசெவியூா் ஒட்டவலவு பகுதியைச் சோ்ந்தவா் பா... மேலும் பார்க்க

விபத்தில் உயிரிழந்த திமுக நிா்வாகி குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

சாலை விபத்தில் உயிரிழந்த திமுக நிா்வாகி குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவியை முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை வழங்கினாா். பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோவில் நகர திமுக ஒன்றிய பிரதிநிதி கேபிள் ச... மேலும் பார்க்க