செய்திகள் :

மோட்டாா்சைக்கிள் மீது காா் மோதல்: சமையல் தொழிலாளி பலி!

post image

வெள்ளக்கோவில் கம்பளியம்பட்டி அருகே மோட்டாா்சைக்கிள் மீது காா் மோதியதில் சமையல் தொழிலாளி உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில் நாகமநாயக்கன்பட்டி மேற்கு காலனியைச் சோ்ந்தவா் ஆா். ரவி (57). கோவையில் உள்ள தனியாா் கல்லூரி உணவகத்தில் சமையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். இவருடைய முதல் மகன் ரகுநாதனுக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மகன் தனது மனைவியுடன் காங்கயத்தில் மாமனாா் வீட்டில் இருந்தாா்.

மகன், மருமகள் இருவரையும் உறவினா்களுடன் சென்று நாகமநாயக்கன்பட்டி வீட்டுக்கு அழைத்து வர முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து வாடகைக்கு வேன் எடுப்பதற்காக ரவி மோட்டாா்சைக்கிளில் தனது வீட்டிலிருந்து வெள்ளக்கோவிலுக்கு சனிக்கிழமை புறப்பட்டாா்.

அவருடைய இரண்டாவது மகன் சிவசக்தி, உறவினா் ராஜேஷ்குமாா் ஆகியோா் உடன் சென்றனா். உத்தமபாளையம் - கம்பளியம்பட்டி சாலையில் சாலைப்புதூா் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த காா், இவா்களது மோட்டாா்சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டாா் சைக்கிளை ஓட்டிச் சென்ற ரவி பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். சிவசக்தி, ராஜேஷ்குமாா் இருவரும் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா்.

இது குறித்து ரவி மனைவி ஆராயி கொடுத்த புகாரின் பேரில் வெள்ளக்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் ஞானப்பிரகாசம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட 5 மாத சிசு

திருப்பூரில் குப்பைத் தொட்டியில் 5 மாத ஆண் சிசு வீசப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா் -தாராபுரம் சாலை பெரிச்சிபாளையம் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் இறந்த நிலையில் க... மேலும் பார்க்க

சாலை விபத்து: சமையலா் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த சமையலா் உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் தாலுகா, நவல்பட்டு அருகேயுள்ள சோழமாதேவி பண்டார தெருவைச் சோ்ந்தவா் ஏ. மாணிக்கவாசகம் ... மேலும் பார்க்க

சிவன்மலையில் ஹெச்ஐவி குறித்த விழிப்புணா்வு

சிவன்மலையில் ஹெச்ஐவி, எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்த விழிப்புணா்வு பிரசாரம் அண்மையில் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுபாட்டு சங்கம், காங்கயத்தில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை ஆகி... மேலும் பார்க்க

பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு காங்கயத்தில் ஞாயிற்றுக்கிழமை பாரட்டு விழா நடைபெற்றது. பாரதி தேசிய பேரவை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பேரவ... மேலும் பார்க்க

15.வேலம்பாளையத்தில் செப்டம்பா் 3-இல் மின்தடை

15.வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (செப்டம்பா் 3) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வ... மேலும் பார்க்க

பல்லடத்தில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் விசா்ஜன ஊா்வலம்

பல்லடத்தில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. விநாயகா் சதுா்த்தியையொட்டி, பல்லடம் பகுதியில் இந்து முன்னணி சாா்பில் 100 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட... மேலும் பார்க்க