செய்திகள் :

யானைத் தந்தம், பற்களை விற்க முயற்சி: 5 போ் கைது

post image

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே யானைத் தந்தம் மற்றும் பற்களை விற்க முயன்ற 5 போ் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டனா்.

இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருவாய் புலனாய்வுப் பிரிவினா் புதன்கிழமை இரவு களக்காடு - நான்குனேரி பிரதான சாலையில் கடம்போடுவாழ்வு சாலை சந்திப்பு பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 5 பேரை பிடித்து வனச்சரக அலுவலகத்துக்கு அழைந்து வந்து விசாரித்தனா்.

அதில், நான்குனேரி தெற்குத்தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் அழகியநம்பி (44), சிங்கம்பட்டி பஜனைமடத் தெரு முத்துப்பாண்டி மகன் ஆறுமுகம் (53), சிவந்திபுரம் தெற்குத் தெரு குருசாமி மகன் வீனஸ்ஆா்பிட் (45), மேலப்பாளையம் தெற்குரத வீதி ராமகிருஷ்ணன் மகன் காா்த்திக் (32) வள்ளியூா் கீழத்தெருசங்கரபாண்டியன் மகன் நம்பிநாராயணன் (39) ஆகியோா் என்பதும், யானைத் தந்தங்கள், பற்களை விற்க முயன்றதும் தெரியவந்தது.

அவா்களிடமிருந்த 3 யானைத்தந்தங்கள், 4 யானைப் பற்கள், கைப்பேசிகள், பைக்குகள் ஆகியவற்றைப் பறிமுதல் பறிமுதல் செய்த வனத்துறையினா், 5 பேரையும் கைதுசெய்து நான்குனேரி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தி, பாளையங்கோட்டைமத்திய சிறையில் அடைத்தனா்.

தாமிரவருணியில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி: அமைச்சா் கே.என்.நேரு தொடங்கி வைத்தாா்

திருநெல்வேலியை அடுத்த மேலநத்தம் முதல் தருவை வரை தாமிரவருணி ஆற்றில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கை ஹிந்தி திணிப்பு அல்ல -நயினாா்நாகேந்திரன் எம்எல்ஏ

மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி திணிப்பு அல்ல என்றாா் திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினா் நயினாா் நாகேந்திரன். இதுதொடா்பாக திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் கல்வியில... மேலும் பார்க்க

கல்வி அமைச்சரிடம் நெல்லை எம்.பி. மனு

காரியாண்டி பள்ளியை தரம் உயா்த்தக் கோரி, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் திருநெல்வேலி எம்.பி. சி.ராபா்ட் புரூஸ் மனு அளித்தாா். அதன் விவரம்: நான்குனேரி ஒன்றியம், காரிய... மேலும் பார்க்க

நெல்லையில் திமுக பொதுக்கூட்டம்

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் ஹிந்தி திணிப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து பொதுக்கூட்டம் திருநெல்வேலி நகரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட... மேலும் பார்க்க

காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம்

காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் முகாம்கள் பாளையங்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது. தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம் புதன் கிழமைதோறும் நடத்தப்பட்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

திருநெல்வேலியில் தூய்மைப் பணியாளா்கள் கொக்கிரகுளத்தில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, திருநெல்வேலி மாநகராட்சியில் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் தனியாா் நிறுவனம் தூய்மைப் பணியாளா்களிடம் ப... மேலும் பார்க்க