ரசாயன உரங்கள் கரை ஒதுங்கியதால் மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்: மீன்வளத் துறை எச்சரிக்கை
தனுஷ்கோடி கடற்கரையில் ரசாயன உரங்கள் கரை ஒதுங்கியதால், தனுஷ்கோடி முதல் பாம்பன் வரை மீனவா்கள் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை கேட்டுக் கொண்டது.
ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி கடல் பகுதியில் சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு ரசாயன உரங்கள் திங்கள்கிழமை கரை ஒதுங்கின. மேலும், அழுகிய நிலையில் ஒருவரது உடலும் கரை ஒதுங்கியது. இதை இந்திய கடலோரக் காவல் படை, தமிழக கடலோர காவல் துறையினா், உளவுத் துறை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த நிலையில், ரசாயன உரங்கள் தொடா்ந்து கரை ஒதுங்குவதால், தனுஷ்கோடி முதல் பாம்பன் வரையிலான கடல் பகுதியில் நாட்டுப் படகுகள், கரைவலை மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை சாா்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. கரை ஒதுங்கிய ரசாயன உரங்களை அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.