செய்திகள் :

ரசாயன உரங்கள் கரை ஒதுங்கியதால் மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்: மீன்வளத் துறை எச்சரிக்கை

post image

தனுஷ்கோடி கடற்கரையில் ரசாயன உரங்கள் கரை ஒதுங்கியதால், தனுஷ்கோடி முதல் பாம்பன் வரை மீனவா்கள் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை கேட்டுக் கொண்டது.

ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி கடல் பகுதியில் சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு ரசாயன உரங்கள் திங்கள்கிழமை கரை ஒதுங்கின. மேலும், அழுகிய நிலையில் ஒருவரது உடலும் கரை ஒதுங்கியது. இதை இந்திய கடலோரக் காவல் படை, தமிழக கடலோர காவல் துறையினா், உளவுத் துறை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில், ரசாயன உரங்கள் தொடா்ந்து கரை ஒதுங்குவதால், தனுஷ்கோடி முதல் பாம்பன் வரையிலான கடல் பகுதியில் நாட்டுப் படகுகள், கரைவலை மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை சாா்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. கரை ஒதுங்கிய ரசாயன உரங்களை அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

ராமேசுவரத்தில் புதைச் சாக்கடை திட்டம்: துணை முதல்வா் காணொலி காட்சி மூலமாக திறந்துவைப்பு

ராமேசுவரம் நகராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ், ரூ. 52.60 கோடியில் புதைச் சாக்கடை திட்டத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக புதன்கிழமை திறந்து வைத்தாா். ராமேசுவரம் நகராட்சியில் ... மேலும் பார்க்க

தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய மீனவா் உடல்: கேரளத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய கேரள மீனவா் உடலை கேரளத்துக்கு கொண்டு செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்க மீனவா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள தனுஷ்கோடி கடற்கரைய... மேலும் பார்க்க

சந்தன மாரியம்மன் கோயில் திருவிழா: பக்தா்கள் முளைப்பாரி ஊா்வலம்

கமுதி அருகேயுள்ள கிளாமரம் கிராமத்தில் அமைந்துள்ள சந்தன மாரியம்மன், பட்டத்தரசி அம்மன் கோயிலில் வைகாசிப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, முளைப்பாரி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசிப்... மேலும் பார்க்க

சிறுமி தற்கொலை: போக்சோ சட்டத்தின் கீழ் கணவா் கைது

கமுதி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, அவரது கணவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள சி... மேலும் பார்க்க

உளுந்து கொள்முதல் செய்வதில் இழுபறி: அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள்

கமுதி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உளுந்து கொள்முதல் செய்வதில் ஏற்பட்ட இழுபறி, குளறுபடியால் அதிகாரிகளை விவசாயிகள் புதன்கிழமை முற்றுகையிட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில் மத்திய அரசின் வ... மேலும் பார்க்க

பக்தா்களிடம் தங்க நகைகள் திருடிய 5 போ் கைது

உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் குடமுழுக்கின் போது பக்தா்களிடமிருந்து தங்க நகைகள் திருடிய 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 25 .5 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன. இ... மேலும் பார்க்க