மாணவா்கள் நலனைக் கருதி கல்வித் தொகை நிலுவையை உடனே விடுவிக்க வேண்டும்: திருவள்ளூா...
ரபாடா 5 விக்கெட்டுகள்: ஆஸி. 212 ரன்களுக்கு ஆல் அவுட்!
டபிள்யூடிசி இறுதிப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸி. அணி 212-க்கு ஆல் அவுட்டானது.
லண்டனில் நடைபெற்றுவரும் டபிள்யூடிசி இறுதிப் போட்டியில் தெ.ஆ. டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
ஆஸி. அணியின் டாப் ஆர்டர் தெ.ஆ. அணியின் வேகப் பந்து வீச்சில் தாக்குப் பிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.
நிதானமாக ஆடிய ஸ்மித், பியூ வெப்ஸ்டர் மட்டுமே அரைசதத்தினைக் கடந்தார்கள்.
சிறப்பாக விளையாடி வந்த ஸ்மித்தை மார்க்ரம் விக்கெட் எடுத்தார்.
தேநீர் இடைவேளைக்குப் பிறகு கேசவ் மகாராஜா அலெக்ஸ் கேரி விக்கெட்டை கைப்பற்றினார்.
தென்னாப்பிரிக்க அணியில் ரபாடா அதிகபட்சமாக 5, மார்கோ யான்சென் 3 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினார்கள்.
ஆஸி. அணியின் 5 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து சொதப்பினார்கள்.