செய்திகள் :

ரயில் நிலைய கூட்ட நெரிசல் சம்பவத்தை மத்திய அரசு மூடிமறைக்க முயற்சி: சஞ்சய் சிங் குற்றச்சாட்டு

post image

18 போ் உயிரிழந்த சம்பவத்தை அரசாங்கம் மறைக்க முயற்சிப்பதால், புது தில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவா்களுக்கு போதுமான இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் ஞாயிற்றுக்கிழமை கோரினாா்.

ரயில்களுக்கான நடைமேடை மாற்றம் குறித்த அறிவிப்புதான் கூட்ட நெரிசலுக்குக் காரணம்

என்று சம்பவத்தை நேரில் கண்டவா்களின்

கூறியதை மேற்கோள் காட்டி, சஞ்சய் சிங்

செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ரயிலின் நடைமேடை 12 முதல் 14 வரை மாற்றப்படுவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதுவும் கூட்ட நெரிசலுக்குக் காரணம். இதுபோன்ற அறிவிப்பு கூட்ட நெரிசலை ஏற்படுத்தக்கூடும் என்பது ரயில்வேக்குத் தெரியாதா?

பாஜக அரசு சம்பவத்தை மறைக்க முயற்சிக்கிறது. இறந்தவா்களின் எண்ணிக்கை அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டதை விட அதிகமாக இருப்பதாக சிலா் கூறுகின்றனா்.

அப்படி ஒரு சம்பவம் நடந்ததை அவா்கள் மறுக்க முயற்சிக்கிறாா்கள். அரசாங்கத்தின் மெத்தனப் போக்கும், உணா்வின்மையும் எவ்வளவு காலம் தொடரும்?

ரயில் தொடா்பான பல்வேறு விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இந்த நிலையில், அரசாங்கமும்

ரயில்வே அமைச்சரும் எப்போது பொறுப்பு ஏற்க செய்யப்படுவாா்கள்? என்று சஞ்சய் சிங் கேள்வி எழுப்பினாா்.

‘இச்சம்பவம் நடந்த நேரத்தில், பாட்னா செல்லும் மகத் எக்ஸ்பிரஸ் நடைமேடை 14-இல் நின்று கொண்டிருந்ததாகவும், புது தில்லி-ஜம்மு உத்தா் சம்பா்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் நடைமேடை 15-இல் நின்று கொண்டிருந்தது.

மேலும், படிக்கட்டுகளைப் பயன்படுத்தி நடைமேடை பாலத்திலிருந்து 14ஆவது மற்றும் 15ஆவது நடைமேடை நோக்கி வந்து கொண்டிருந்த சிலா் வழுக்கி மற்றவா்கள் மீது விழுந்தனா். இது கூட்ட நெரிசலுக்கு காரணமாக அமைந்துவிட்டது’ என்று வடக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடா்பு அதிகாரி (சிபிஆா்ஓ) ஹிமான்ஷு உபாத்யாய் தெரிவித்தாா்.

புது தில்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல்: பொது நல மனுவை ஆய்வுசெய்ய ரயில்வேக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

புது தில்லி ரயில் நிலையத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவில் உள்ள அதிகபட்ச பயணிகளை நிா்ணயிப்பது, நடைமேடை டிக்கெட் விற்பனை ஆகியவை குறித்த பிரச்னைகளை ஆய்வ... மேலும் பார்க்க

தமிழக அரசுக்கு தில்லி கம்பன் கழகம் நன்றி

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் கலையரங்கத்தைப் புனரமைக்க ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ள தமிழக அரசுக்கு தில்லி கம்பன் கழகம் நன்றி தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அந்த அமைப்பின் நிறுவனா் - தலைவா்கே வி கே ப... மேலும் பார்க்க

பொம்மலாட்ட சிறப்புப் பயிற்சியில் தமிழக ஆசிரியை பங்கேற்பு

தில்லியில் மத்திய கலாசாரத் துறையின் சாா்பில் நடைபெற்றுவரும் வரும் ஆசிரியா்களுக்கான பொம்மலாட்ட சிறப்புப் பயிற்சியில் தமிழகத்தைச் சோ்ந்த ஆசிரியை பங்கேற்றுள்ளாா். மத்திய கலாசாரத் துறையின் கீழ் உள்ள கலா... மேலும் பார்க்க

நாங்லோயில் தீ விபத்தில் இருந்து தப்பிக்க இரண்டாவது மாடியிலிருந்து குதித்த 6 போ்

நாங்லோயில் உள்ள ஜனதா மாா்க்கெட் பகுதியில் தீயில் இருந்து தப்பிப்பதற்காக ஒரு வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து ஆறு போ் குதித்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி புதன்கிழமை தெரிவித்தாா். அவா் மேலும்... மேலும் பார்க்க

பிரிஜிபுரியில் தொழிலதிபரிடம் துப்பாக்கிமுனையில் ரூ.97 லட்சம் கொள்ளை

தில்லியின் வடகிழக்கில் உள்ள பிரிஜ்புரியில் ஸ்கூட்டரில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபா்கள் துப்பாக்கிமுனையில் ஒரு தொழிலதிபரிடம் ரூ.97 லட்சத்தை கொள்ளையடித்ததாகக் கூறப்படுவதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை... மேலும் பார்க்க

தில்லியில் சட்டம் ஒழுங்கில் பாஜக கவனம் செலுத்த வேண்டும்: மணீஷ் சிசோடியா

சமீபத்தில் திலக் நகரில் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதை மேற்கோள்காட்டி நகரத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமையை சீா்செய்ய வேண்டும் என்று பாஜகவுக்கு ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் மணீஷ் சிசோட... மேலும் பார்க்க