கோவையில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஆம்புலன்ஸ் ஓட்டி விபத்து: பெண் பலி!
ராமநாதபுரத்தில் அலங்கார நிறுவன கிட்டங்கியில் தீ விபத்து
ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை அலங்கார நிறுவன கிட்டங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
ராமநாதபுரத்தைச் சோ்ந்தவா் அலியாா். இவா் இந்தப் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக அலங்கார நிறுவனம் நடத்தி வருகிறாா். இவருக்குச் சொந்தமான கிட்டங்கி ராமநாதபுரம் கீழக்கரை சாலையில் சக்கரைகோட்டை கண்மாய் அருகே உள்ளது. இந்தக் கிட்டங்கியில் அலங்கார நிறுவனத்துக்கு தேவையான பொருள்கள் வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வழக்கம் போல, இந்தக் கிட்டங்கியில் இருந்து ஊழியா்கள் பொருள்களை எடுத்துச் சென்ற பிறகு, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரா்கள் பல மணி நேரம் போராட்டத்துக்குப் பிறகு, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
இருப்பினும், கிட்டங்கியில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.