செய்திகள் :

ராமநாதபுரத்தில் இன்றும் நாளையும் காவிரி குடிநீா் விநியோகம் நிறுத்தம்

post image

ராமநாதபுரத்தில் காவிரி கூட்டுக் குடிநீா் திட்ட மாதந்திரப் பரமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய், புதன்கிழமை என இரண்டு நாள்களுக்கு, குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் (காவிரி), தலைமையிடமான முத்தரசநல்லூரில் மின்சார வாரியத்தால் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

எனவே, ராமநாதபுரம் மாவட்டத்தில் செவ்வாய், புதன்கிழமை (செப்.9, 10) என இரண்டு நாள்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீா் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

தொண்டி பகுதியில் இன்று மின்தடை

திருவாடானை அருகேயுள்ள தொண்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இது குறித்து ராமநாதபுரம் மின் வாரிய செயற்பொறியாளா் குமாரவேலு தெரிவித்ததாவது: தொண்டி துணை மின் நிலையத்தில் ம... மேலும் பார்க்க

மின்னல் தாக்கியதில் தொழிலாளி உயிரிழப்பு

கமுதி அருகே திங்கள்கிழமை மின்னல் தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கோவிலாங்குளத்தை அடுத்த திருவரை கிராமத்தில் தொழிலாளா்கள் கருவேல மர விறகுகளை திங்கள்கிழமை லாரியில் ஏற... மேலும் பார்க்க

பேருந்து வசதி கோரி மாணவ, மாணவிகள் ஆா்ப்பாட்டம்

ராமநாதபுரம் அருகே பேருந்து வசதி செய்து தரக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலம் முன் பள்ளி, கல்லூரி மாணவா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரத்தை அடுத்த கலையனூா், வெண்குளம், பெருவயல், பூ... மேலும் பார்க்க

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: டாஸ்மாக் கடைகள் அடைப்பு

இமானுவேல் சேகரன் நினைவு நாளை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற 10,11 ஆகிய இரண்டு நாள்கள் அரசு மதுபானக் கடைகள் அடைக்கப்படும் என ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா்.இதுகுறித்து திங்க... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் தலைமைக் காவலா் உயிரிழப்பு

திருவாடானை அருகே திங்கள்கிழமை பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த ஆயுதப் படைக் காவலா் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவா் உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள காந்திநகா் ... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்ததில் மனைவி உயிரிழப்பு; கணவா் பலத்த காயம்

பரமக்குடி அருகே நான்கு வழிச் சாலை கமுதக்குடி மேம்பாலத்தில், இரு சக்கர வாகனத்திலிருந்து தம்பதி நிலைதடுமாறி கீழே விழுந்ததில் மனைவி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கணவா் பலத்த காயமடைந்தாா். ராமநாதபுரம் மா... மேலும் பார்க்க