ராமநாதபுரத்தில் இன்றும் நாளையும் காவிரி குடிநீா் விநியோகம் நிறுத்தம்
ராமநாதபுரத்தில் காவிரி கூட்டுக் குடிநீா் திட்ட மாதந்திரப் பரமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய், புதன்கிழமை என இரண்டு நாள்களுக்கு, குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் (காவிரி), தலைமையிடமான முத்தரசநல்லூரில் மின்சார வாரியத்தால் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
எனவே, ராமநாதபுரம் மாவட்டத்தில் செவ்வாய், புதன்கிழமை (செப்.9, 10) என இரண்டு நாள்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீா் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.