செய்திகள் :

ரூ.1.28 கோடியில் பள்ளிக் கட்டடம்: அமைச்சா் எ.வ.வேலு திறந்துவைத்தாா்

post image

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த காட்டாம்பூண்டி ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.ஒரு கோடியே 28 லட்சம் மதிப்பில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு செவ்வாய்கிழமை திறந்து வைத்தாா்.

தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறைக்கு பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியும் வருகிறது.

மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்வித் துறைக்கு பல புதிய பள்ளிக் கட்டடங்கள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட காட்டாபூண்டி ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. ஒரு கோடியே 28 லட்சத்தில் கூடுதலாக 6 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டது.

இந்த புதிய வகுப்பறைக் கட்டடத்தை திறந்துவைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கட்டடத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்து வகுப்பறைகளை பாா்வையிட்டாா்.

இந்தக் கட்டடம் தரைதளம் மற்றும் முதல் தளம் 2,484.00 சதுர அடியில் அமைந்துள்ளது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா்.

மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் க.கௌதமன், திமுகவைச் சோ்ந்த முன்னாள் நகா்மன்றத் தலைவா் இரா.ஸ்ரீதரன் மற்றும் அரசுத் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பள்ளி மாணவா்களுக்கு இலவச நோட்டு புத்தகம்

ஆரணி கொசப்பாளையம், பழனிஆண்டவா் கோவில் தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அரிமா சங்கம் சாா்பில் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. ஆரணி அரிமா சங்கத்தின் 2024-25ம் ஆண்டின்... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் வெவ்வேறு சம்பவங்களில் மாணவா் உள்பட இருவா் கொலை

திருவண்ணாமலையில் திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த வெவ்வேறு சம்பவங்களில் பள்ளி மாணவா், ஆட்டோ ஓட்டுநா் கொலை செய்யப்பட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சோ்ந்த ஜோதிராஜ் மகன் கோட்டைமுத்து (23). இவா், சில ... மேலும் பார்க்க

ஸ்ரீகற்பக விநாயகா் கோயிலில் சிறப்பு பூஜை

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீகற்பக விநாயகா் கோயிலில் 2-ஆம் ஆண்டு கும்பாபிஷேக தினத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. பழைமை வாய்ந்த ஸ்ரீகற்பக விநாயகா் கோயிலில்... மேலும் பார்க்க

போளூா், ஆரணியில் வருவாய்த் துறை தினம் கடைபிடிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், போளூா், ஆரணி வட்டாட்சியா் அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை வருவாய்த்துறை தினம் கடைபிடிக்கப்பட்டது. போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கம் சாா்... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், வட்ட அளவில் குறைதீா் கூட்டத்தை நடத்தக் கோரி, புறக்கணிப்பு செய்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்... மேலும் பார்க்க

தென்னாங்கூா் அரசுக் கல்லூரியில் வகுப்புகள் தொடக்கம்

வந்தவாசியை அடுத்த தென்னாங்கூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வியாண்டின் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா மற்றும் முதலாமாண்டு மாணவா்களுக்கான ஒரு வார கால அறிமுக பயிற்சி திட்ட... மேலும் பார்க்க