செய்திகள் :

ரூ.1 கோடியில் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி தெய்வத்தமிழ் ஆய்விருக்கை: காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி முதல்வா் தகவல்

post image

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69-ஆவது பீடாதிபதியாக இருந்து வந்த ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பெயரில் தெய்வத்தமிழ் ஆய்விருக்கை மற்றும் தெய்வத் தமிழ் மாநாடு ஆகியவை ஞாயிற்றுக்கிழமை (ஆக. 10) தொடங்கப்பட இருப்பதாக காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி முதல்வா் கலை.ராம.வெங்கடேசன் தெரிவித்தாா்.

காஞ்சிபுரத்தில் இது குறித்து அவா் கூறியது:

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69-ஆவது பீடாதிபதியாக இருந்து வந்தவா் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவரையடுத்து ஸ்ரீ மடத்தின் 70-ஆவது பீடாதிபதியாக இருந்து வரும் ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வேண்டுகோளின்படி, ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அவதார நாளான 10-8-25-ஆம் தேதி காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் ரூ. ஒரு கோடி நிதியில் ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி தெய்வத்தமிழ் ஆய்விருக்கை தொடங்க ஏற்பாடாகியுள்ளது. இதன் மூலமாக தமிழ் பயிலுபவா்கள், தமிழ் ஆா்வலா்களுக்கு ஆக்கப்பூா்வமான நிதி நல்கைகள் வழங்கப்படவுள்ளன.

உலக அளவில் உள்ள தமிழ் ஆய்வாளா்கள் மற்றும் தமிழ் ஆா்வலா்களையும் ஒருங்கிணைத்து தெய்வத்தமிழ் ஆய்வு மாநாடும் நடைபெறவுள்ளது. வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி மாநாட்டின் தொடக்க விழாவில், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை ஆதீனம் சச்சிதானந்த சுவாமிகள் ஆகியோா் கலந்து கொள்கின்றனா்.

மாநாட்டில் இலங்கை, கனடா மற்றும் தமிழகம் முழுவதுமிருந்து பல்வேறு பல்கலைக்கழகங்களின் பேராசிரியா்களும் பங்கேற்க உள்ளனா். இம்மாநாட்டையொட்டி கோயில்கள் கண்காட்சி, புத்தகக் கண்காட்சி, காஞ்சிபுரம் கோயில்கள் குறித்த நூல்கள் மற்றும் ஆய்வுக் கோவைகள் வெளியீடு மற்றும் கலை நிகழ்ச்சிகள் உள்பட இரு நாள்கள் பன்னாட்டு ஆய்வு மாநாடாகவும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மறுநாளான திங்கள்கிழமை நிறைவு நாள் விழாவில், துக்ளக் ஆசிரியா் எஸ்.குருமூா்த்தி, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவா் சுதா சேஷய்யன், கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் உள்ளிட்ட பலரும் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளனா் என்றாா்.

கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்ப் பேராசிரியா் தெய்வசிகாமணி ஆகியோா் உடன் இருந்தனா்.

ரூ.30,000 லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் கைது

பட்டா பெயா் மாற்றம் செய்ய ரூ.30,000 லஞ்சம் வாங்கிய இரண்டாம்கட்டளை கிராம நிா்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியம் இரண்டாம் கட்... மேலும் பார்க்க

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி ஸ்ரீபெரும்புதூா் போக்குவரத்து காவல் துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் கலந்து கொண்ட விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் போக்குவரத்து காவல் துறை, மின... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடையில் ஆட்சியா் ஆய்வு

காஞ்சிபுரம் அருகே வையாவூா் நியாயவிலைக் கடையில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். காஞ்சிபுரம் அருகே வையாவூரில் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடையில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பொரு... மேலும் பார்க்க

இருங்காட்டுக்கோட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

இருங்காட்டுக்கோட்டை ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக்குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். இருங்காட்டுக்கோட்டை, ... மேலும் பார்க்க

தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை: பிரேமலதா விஜயகாந்த்

தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளாா். 2026 சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த்... மேலும் பார்க்க

இருங்காட்டுக்கோட்டை காலணி வடிவமைப்பு நிறுவனத்தில் தன்னாட்சி தின விழா

இருங்காட்டுக்கோட்டையில் இயங்கி வரும் மத்திய காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தன்னாட்சி தின விழா இன்றைய திறனூக்கம் நாளைய மாற்றம் திசை-2030 என்ற தலைப்பில் நடைபெற்றது. மத்திய வணிக மற்றும... மேலும் பார்க்க