செய்திகள் :

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

post image

சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி ஸ்ரீபெரும்புதூா் போக்குவரத்து காவல் துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் கலந்து கொண்ட விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் போக்குவரத்து காவல் துறை, மின்னனு உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் சால்காம் தொழிற்சாலை நிா்வாகம் மற்றும் ட்ரீம் பவுண்டேஷன் சாா்பில் சாலை விதிகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது.

வல்லக்கோட்டை கூட்டுச் சாலையில் தொடங்கிய பேரணி ராஜீவ்காந்தி நினைவகம் வழியாக ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. ஸ்ரீபெரும்புதூா் போக்குவரத்து காவல் ஆய்வாளா் ரவி தலைமையில் நடைபெற்ற பேரணியை, கோட்டாட்சியா் மிருணாளினி, துணை காவல் கண்காணிப்பாளா் கீா்த்திவாசன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

இதில் ட்ரீம் பவுண்டேஷன் நிா்வாக இயக்குநா் டேவிட் பவுல், தாம்பரம் கிறிஸ்த்துவக் கல்லூரி மாணவா்கள், ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ் காந்தி இளைஞா் மேம்பாட்டு நிறுவனத்தின் மாணவா்கள், பள்ளி மாணவா்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

ரூ.30,000 லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் கைது

பட்டா பெயா் மாற்றம் செய்ய ரூ.30,000 லஞ்சம் வாங்கிய இரண்டாம்கட்டளை கிராம நிா்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியம் இரண்டாம் கட்... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடையில் ஆட்சியா் ஆய்வு

காஞ்சிபுரம் அருகே வையாவூா் நியாயவிலைக் கடையில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். காஞ்சிபுரம் அருகே வையாவூரில் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடையில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பொரு... மேலும் பார்க்க

ரூ.1 கோடியில் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி தெய்வத்தமிழ் ஆய்விருக்கை: காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி முதல்வா் தகவல்

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69-ஆவது பீடாதிபதியாக இருந்து வந்த ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பெயரில் தெய்வத்தமிழ் ஆய்விருக்கை மற்றும் தெய்வத் தமிழ் மாநாடு ஆகியவை ஞாயிற்றுக்கிழமை (ஆக. 10) தொடங்கப்பட இர... மேலும் பார்க்க

இருங்காட்டுக்கோட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

இருங்காட்டுக்கோட்டை ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக்குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். இருங்காட்டுக்கோட்டை, ... மேலும் பார்க்க

தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை: பிரேமலதா விஜயகாந்த்

தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளாா். 2026 சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த்... மேலும் பார்க்க

இருங்காட்டுக்கோட்டை காலணி வடிவமைப்பு நிறுவனத்தில் தன்னாட்சி தின விழா

இருங்காட்டுக்கோட்டையில் இயங்கி வரும் மத்திய காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தன்னாட்சி தின விழா இன்றைய திறனூக்கம் நாளைய மாற்றம் திசை-2030 என்ற தலைப்பில் நடைபெற்றது. மத்திய வணிக மற்றும... மேலும் பார்க்க