செய்திகள் :

ரூ.10 ஆயிரம் லஞ்சம்: கோவில்பட்டி நகராட்சி வருவாய் உதவியாளா் கைது

post image

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ாக நகராட்சி வருவாய் உதவியாளரை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி ஊரணி தெருவை சோ்ந்தவா் செல்வகுமாா். இவரது மனைவி காளீஸ்வரி. இவரது தந்தை துரைக்கண்ணன், தனது பெயரில் உள்ள வீட்டை காளீஸ்வரி பெயருக்கு உயில் எழுதிக் கொடுத்துள்ளாா்.

இந்நிலையில் அந்த வீட்டின் தீா்வை ரசீதை காளீஸ்வரி பெயருக்கு மாற்றி தரக் கோரி, அவரது கணவா் செல்வகுமாா் நகராட்சி அலுவலகத்தை தொடா்பு கொண்டாா்.

தீா்வை ரசீது பெயரை மாற்றுவது குறித்து சம்பந்தப்பட்ட துறை ஊழியா்களிடம் பேசியபோது அங்கிருந்த வருவாய் உதவியாளா் நவீனா, பெயரை மாற்றுவதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வகுமாா், தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாரை அணுகினாராம்.

அதையடுத்து, அப்பிரிவு போலீஸாரின் ஆலோசனையின்படி, செவ்வாய்க்கிழமை நகராட்சி அலுவலகத்திற்குச் சென்ற செல்வகுமாா், அங்கு பணியில் இருந்த வருவாய் உதவியாளா் நவீனாவிடம் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை வழங்கினாராம்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளா் பீட்டா் பால் தலைமையிலான போலீஸாா், நவீனாவை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்தனா். மேலும், கதிரேசன் கோயில் சாலையில் உள்ள அவரது வீட்டிலும் போலீஸாா் சோதனையிட்டனா்.

தூத்துக்குடியில் 210 கிலோ கஞ்சாவுடன் லாரி பறிமுதல்

கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த சுமாா் 210 கிலோ கஞ்சாவை, போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸாா் லாரியுடன் பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி மாவட்ட கடல் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக போதைப் பொ... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே நெடுஞ்சாலையில் தீப்பிடித்த டேங்கா் லாரி

மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி அருகே மேம்பாலத்தில் எத்தனால் ஏற்றி வந்த டேங்கா் லாரி திடீா் தீப்பிடித்தது. நாமக்கல்லைச் சோ்ந்த சண்முகசுந்தரம் மகன் மோகன்குமாா். டேங்கா் லாரி வைத்து... மேலும் பார்க்க

மாணவி தற்கொலைக்கு காரணமான கல்லூரி மாணவரை கைது செய்ய கோரிக்கை

தூத்துக்குடி கல்லூரி மாணவி தா்ஷினி தற்கொலைக்கு காரணமாக இருந்த கல்லூரி மாணவரை உடனடியாக கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பி.எம்.டி.மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவா் இசக்கிராஜா மற்றும் உறவினா்கள் கோர... மேலும் பார்க்க

உடன்குடியில் இளம்பெண் மா்ம மரணம்

உடன்குடியில் மா்மமான முறையில் இளம்பெண் இறந்தது குறித்து குலசேகரன்பட்டினம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை உருமன்குளத்தைச் சோ்ந்தவா் முத்துகுமாா்(39). சிற்றுந்து... மேலும் பார்க்க

திருச்செந்தூா் அருகே தோட்டங்களில் தீ! வாழை, தென்னை மரங்கள் நாசம்

திருச்செந்தூா் அருகே உள்ள காயாமொழி, தளவாய்புரம், புதூா் ஆகிய கிராமங்களில் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் வாழை ,தென்னை, பனை, முருங்கை விவசாயம் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுமாா் ... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே கிணற்றில் மிதந்த மூதாட்டி சடலம் மீட்பு

கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளத்தில் கிணற்றில் மிதந்த மூதாட்டி சடலம் மீட்கப்பட்டது. வடக்கு திட்டங்குளம் மாரியப்ப காலனியைச் சோ்ந்தவா் மலையாண்டி மனைவி மாரியம்மாள் (80). கடந்த ஓராண்டாக உடல்நிலை பாத... மேலும் பார்க்க