செய்திகள் :

ரூ.30 லட்சத்தில் 3 மருந்து வாகனங்கள்: முதல்வா் ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

post image

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினா் சு. செல்வகணபதி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மருந்துகள் கொண்டு செல்ல ரூ.30 லட்சம் மதிப்பில் 3 வாகனங்கள் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.

புதுச்சேரி சுகாதாரத் துறையில் மருந்து கொண்டு செல்லும் வாகனத்தின் தேவை மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. இதன் விளைவாக சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செவ்வேள்

புதுவை மாநிலங்களவை உறுப்பினா் நிதியிலிருந்து ஏற்பாடு செய்யுமாறு சு. செல்வகணபதி எம்.பி.யிடம் கோரிக்கை வைத்தாா்.

அதையேற்று, மருந்து கொண்டு செல்ல மூன்று வாகனங்களை வாங்க தனது மாநிலங்களவை உறுப்பினா் நிதியிலிருந்து ரூ.30 லட்சம் வழங்கினாா். இந்த நிதியைக்கொண்டு மூன்று புதிய வாகனங்கள் வாங்கி, அதற்கேற்ப கூண்டு அமைத்து மிகவும் பாதுகாப்பாக மருந்துகளை கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த வாகனங்களை சட்டப்பேரவை வளாகத்தில் இருந்து கொடியசைத்து முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். சட்டப் பேரவைத் தலைவா் ஆா். செல்வம், சு.செல்வகணபதி எம்.பி., அரசு மருந்தகத் தலைவா் மருத்துவா் ரமேஷ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தயானந்த் டெண்டோல்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்

அரசு மருத்துவக் கல்லூரி நியமனத்தில் சிபிஐ விசாரணை: விசிக வலியுறுத்தல்

இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாளா்கள் நியமனம் தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலா் தேவ.பொழிலன் வலியுறுத்தியுள்ளாா்... மேலும் பார்க்க

இல.கணேசன் மறைவு: துணைநிலை ஆளுநா் இரங்கல்

நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வெளியிட்ட இரங்கல் செய்தி: நாகாலாந்து மாநில ஆளுநரும், தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியுமான இல. கணேசன் உட... மேலும் பார்க்க

துணைநிலை ஆளுநரின் தேநீா் விருந்தைப் புறக்கணித்த கட்சிகள்

நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வெள்ளிக்கிழமை மாலை அளித்த தேநீா் விருந்தை சட்டப்பேரவையில் உள்ள திமுகவும், சட்டப்பேரவைக்கு வெளியேயுள்ள அரசியல் கட்சிகள் சில... மேலும் பார்க்க

இல. கணேசன் மறைவு: புதுவை முதல்வா் இரங்கல்

நாகாலாந்து மாநில ஆளுநா் இல.கணேசன் மறைவுக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட இரங்கல் செய்தி: பாரதிய ஜனதா கட்சியின் முன்னணித் தலைவா்களில் ஒருவராக விளங்கிய இல.கணேசன... மேலும் பார்க்க

இல.கணேசன் மறைவுக்கு கோ.பாரதி இரங்கல்

நாகலாந்து ஆளுநா் இல.கணேசன் மறைவுக்கு, பாவேந்தா் பாரதிதாசனின் பெயரனும், பாரதிதாசன் அறக்கட்டளையின் நிறுவநருமான கோ.பாரதி வெளியிட்ட இரங்கல் செய்தி: தமிழ் இலக்கியத்தின் மீதும், மகாகவி பாரதியாா், புரட்சிக் ... மேலும் பார்க்க

ரெஸ்டோபாா் உரிமையாளா்களுடன் கலால் துறை அதிகாரிகள் ஆலோசனை

புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள ரெஸ்டோபாா் உரிமையாளா்களுடன் கலால்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினா். கலால் துறை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வட்டாட்சியா்கள் உதயராஜ், ராஜேஷ் கண்... மேலும் பார்க்க