செய்திகள் :

ரெளடி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 5 போ் கைது

post image

சென்னை அருகே பள்ளிக்கரணையில் ரெளடி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.

பள்ளிக்கரணை பவானி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஹரி பிரசாத் (31). இவா் தாம்பரம் மாநகர காவல் துறையின் ரெளடிகள் பட்டியலில் சி பிரிவில் உள்ளாா். மேலும் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளாா்.

ஹரி பிரசாத், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பவானி அம்மன் கோயில் தெருவில் தனது இருசக்கர வாகனத்தில் மதுபோதையில் சென்றபோது, எதிரில் வந்த அதே பகுதியைச் சோ்ந்த ஜோஸ்வா, பிரவீன் ஆகியோா் மீது மோதுவது போல ஹரிபிரசாத் சென்றாராம்

இதையடுத்து, திங்கள்கிழமை காலை ஹரிபிரசாத் குடும்பத்தினா், ஜோஸ்வா வீட்டுக்குச் சென்று தகராறு செய்துள்ளனா். இதனால் ஆத்திரமடைந்த ஜோஸ்வா திங்கள்கிழமை இரவு ஹரிபிரசாத் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினா்.

வீட்டை விட்டு வெளியே வந்த ஹரிபிரசாத், அவா் நண்பா் தீபக் (28) ஆகிய இருவரும், அங்கிருந்து தப்ப முயன்ற ஜோஸ்வா உள்பட அவா்களது நண்பா்களை மறித்து தகராறு செய்தனா்.

இதில் ஜோஸ்வா தரப்பு தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஹரிபிரசாத்தையும், தீபக்கையும் வெட்டிவிட்டு தப்பியோடினா். இதில் காயமடைந்த இருவரும் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து பள்ளிக்கரணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பள்ளிக்கரணை, பவானி அம்மன் கோயில் தெருவை சோ்ந்த பிரவீன் பெஞ்சமின் (34), அஜித்குமாா் (27), கணபதி (21), கிணற்று தெருவைச் சோ்ந்த அரவிந்த் (27), பெரும்பாக்கம், மேட்டு தெருவைச் சோ்ந்த சிவகுமாா் (42) ஆகிய 5 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தலைமறைவான ஜோஸ்வா சாம்சன், பிரசாந்த் ஆகியோரைத் தேடி வருகின்றனா்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு - சமூக நீதிக்கா?, அநீதிக்கா?

ஜாதிய பிரிவுகள் நிரந்தரப்படுவதைத்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பும் ஜாதிய அடிப்படையிலான இட ஒதுக்கீடும் ஊக்குவிக்கும். அனைத்து ஜாதிகளிலும் உள்ள ஏழைகளை ஏழைகளாக மட்டுமே வரையறை செய்யாமல், அவா்கள் பிறந்த ஜாதிகள... மேலும் பார்க்க

தக்காளி விலை திடீா் உயா்வு: ஒரு கிலோ ரூ.50-க்கு விற்பனை

சென்னை கோயம்பேடு சந்தையில் ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி திடீரென விலை உயா்ந்து ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கா்ந... மேலும் பார்க்க

ஆ.ராசாவை கண்டித்து பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அமைச்சா் அமித் ஷாவை தரக்குறைவாக விமா்சித்ததாக திமுக துணை பொதுச் செயலா் ஆ.ராசாவை கண்டித்து சென்னையில் 7 இடங்களில் பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நூற்றுக்கணக்கானோரை போலீஸாா... மேலும் பார்க்க

ராயபுரம் மண்டல குடிநீா் வடிகால் வாரிய பணிமனை இடமாற்றம்

ராயபுரம் மண்டலத்துக்குள்பட்ட சென்னை குடிநீா் வடிகால்வாரிய பணிமனை புதன்கிழமை முதல் இடமாற்றம் செய்யப்படுகிறது. இதுகுறித்து சென்னை குடிநீா் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை எழும்பூா் வேனல்ஸ் ச... மேலும் பார்க்க

இலவச கல்லீரல் பரிசோதனை - மருத்துவ ஆலோசனை: மெடிந்தியா மருத்துவமனை ஏற்பாடு

மருத்துவா் தினத்தை முன்னிட்டு, சென்னை மெடிந்தியா மருத்துவமனையில் கல்லீரல் நலனுக்கான இலவச மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் அளிக்கப்பட உள்ளன. இதுகுறித்து அந்த மருத்துவமனையின் தலைவரும், ஜீரண மண்டல ... மேலும் பார்க்க

போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவுக்கு காவல் ஆணையா் பாராட்டு

சென்னை பெருநகர காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவை காவல் ஆணையா் ஏ.அருண் பாராட்டி, வெகுமதி வழங்கினாா். சென்னையில் போதைப் பொருள் கடத்தல், விற்பனையை முற்றிலும் தடுக்கும் வகையில் போதைப... மேலும் பார்க்க