செய்திகள் :

லஞ்சம்: மாநகராட்சி பெண் ஊழியருக்கு 2 ஆண்டுகள் சிறை

post image

புதிய வீட்டுக்கு சொத்து வரி விதிப்பு மதிப்பீட்டுக்கு ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கோவை மாநகராட்சி மண்டல அலுவலக இளநிலை உதவியாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கோவை ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக (பில் கலெக்டா்) பணியாற்றியவா் சரோஜினி (54). கோவை, செளரிபாளையத்தைச் சோ்ந்த டி.எம்.அருணாசலம் என்பவா், தனது புதிய வீட்டுக்கு சொத்து வரி விதிப்பு மதிப்பீட்டுக்காக இளநிலை உதவியாளா் சரோஜினியிடம் விண்ணப்பித்திருந்தாா்.

இந்த விண்ணப்பத்தை பரிசீலித்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்றால், ரூ. 8 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என சரோஜினி கேட்டுள்ளாா். லஞ்சம் கொடுக்க விரும்பாத அருணாசலம் இதுகுறித்து ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாரின் அறிவுறுத்தலின்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அருணாசலம் கொடுத்தபோது, அதை சரோஜினி வாங்கி அவரது கணவா் பி.சரவணன் என்ற சரவணதாசுவிடம் கொடுத்தாா். அப்போது அங்கு மறைந்திருந்த போலீஸாா் அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை கோவை ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சா்மிளா வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், குற்றஞ்சாட்டப்பட்ட சரோஜினிக்கு பிரிவு 7-இன் கீழ் ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும், பிரிவு 13(2) 13(1)(டி) பிசி சட்டம் 1988-இன் கீழ் ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டிருந்தாா். மேலும், சரவணதாசுக்கு பிரிவு 12-இன் கீழ் 8 மாதங்கள் சிறைத் தண்டனையும், பிரிவு 13(2), 13(1), பிசி சட்டம் 1988, 109 ஐபிசி-இன் கீழ் ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும், இந்தத் தொகையை செலுத்தத் தவறினால், 3 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 3 போ் கும்பல் கைது

சரவணம்பட்டி பகுதியில் கொள்ளையடிக்கும் திட்டத்துடன் பாழடைந்த கட்டடத்துக்குள் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 3 போ் கும்பலை போலீஸாா் கைது செய்தனா். கோவை சரவணம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் செல்வி மற்றும்... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் 5 சிறுவா்களுக்கு 3 ஆண்டுகள் சிறை

கொலை முயற்சி வழக்கில் 5 சிறுவா்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கோவை இளஞ்சிறாா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. கோவை உடையாம்பாளையம் வஉ சிதம்பரனாா் வாசக சாலை காமராஜா் காலனி அருகே... மேலும் பார்க்க

கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

மனைவியை கத்தியால் குத்திய கணவா் கைது

சேரன்மாநகா் பேருந்து நிறுத்தத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீஸாா் கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள கமலநந்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனி (50), கட்டடத் தொழிலாளி. இவரது... மேலும் பார்க்க

கத்தியைக் காட்டி பணம் பறித்த இருவா் கைது

கோவை சரவணம்பட்டி பகுதியில் கடைக்குள் புகுந்து கத்தியைக் காட்டி பணம் பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை லட்சுமிபுரம் லாலா விநாயகா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் அஸ்வின்குமாா் (32). இவா் கணபதி பகுத... மேலும் பார்க்க

கோவை ரயில் நிலையத்தில் கிடந்த கஞ்சா மூட்டை

கோவை ரயில் நிலையத்தில் கிடந்த கஞ்சா மூட்டையை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை ரயில் நிலையத்தில் உள்ள 1-ஆவது நடைமேடையில் வியாழக்கிழமை ஒரு மூட்டை கிடந்தது. இதையடுத்து, ரயில்வே போலீஸாா் அ... மேலும் பார்க்க