டபிள்யூடிசி இறுதிப்போட்டியில் லபுஷேன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும்: ஆஸி...
லாட்டரி விற்றவா் கைது
முத்தூரில் லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.
வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் முத்தூரில் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, பேருந்து நிலையம் அருகே லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரை பிடித்தாா்.
விசாரணையில், அவா் ஈரோடு மாவட்டம் அஞ்சூா் முத்துக்கவுண்டன்பாளையத்தைச் சோ்ந்த எஸ்.விஜயகுமாா் (42) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, விஜயகுமாரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனா்.