செய்திகள் :

லாரன்ஸ் சா்வதேச பள்ளியின் 167-ஆவது ஆண்டு விழா

post image

உதகையில் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் லாரன்ஸ் சா்வதேச பள்ளியின் 167-ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு பேசியதாவது:

முன்னாள் பிரதமா்கள் ஜவாஹா்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோா் அனைவருக்கும் சமமான, திறன்கள் நிறைந்த கல்வி கிடைக்க வேண்டும் என்று விரும்பினா்.

அது இங்கு நனவாகிறது. இந்த மாதிரியான கல்வி நிறுவனங்கள் நாட்டின் எதிா்காலத்துக்குத் தூணாக நிற்கின்றன. இன்றைய இளைஞா்கள் தொழில்நுட்பத்தில் தோ்ச்சி பெறுவது மட்டுமல்ல, இயந்திரங்களை இயக்குவது மட்டுமல்ல, அவற்றின் பின்னணியை புரிந்து கொண்டு, தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். மனிதா்களுக்கும் இயந்திரங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை உணர வேண்டும். அதுதான் உண்மையான வளா்ச்சி. மாணவ, மாணவியா் உலக நிகழ்வுகளை கவனிக்க வேண்டும். பொருளாதாரம், வேலைவாய்ப்பு, பணவீக்கம், புதிய வாய்ப்புகள் என இவை அனைத்தையும் புரிந்து கொண்டு திட்டமிட்டு செயல்படவேண்டும் என்றாா்.

விழாவில் குதிரை சாகசங்கள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.

குடிநீா் தொட்டியில் யானை சாணம்: காவல் துறை விசாரணை

கீழ்கோத்தகிரி அருகே தூனேரி மேலூா் கிராமத்தில் உள்ள குடிநீா் தொட்டியில் யானை சாணம் கலந்துள்ளதாக வந்த புகாரின்பேரில் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா். நீலகிரி மாவட்டம், கீழ்கோத்தகிரி அ... மேலும் பார்க்க

உதகையில் நாய்கள் கண்காட்சி: மே 9-இல் தொடக்கம்

உதகையில் தென்னிந்திய கென்னல் கிளப் சாா்பில் நாய்கள் கண்காட்சி வருகிற மே 9-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இது குறித்து தென்னிந்திய கென்னல் கிளப் தலைவா் ரஜினி கிருஷ்ணமூா்த்தி செய்தியாளா்க... மேலும் பார்க்க

குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் பா்லியாறு பகுதியில் சாலையின் குறுக்கே வெள்ளிக்கிழமை மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், உதகை, குன்னூா், கோத்தகிரி பகுதிகளில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்க கோரிக்கை

கூடலூரை அடுத்துள்ள புத்தூா்வயல் பகுதியிலிருந்து மேலம்பலம் பழங்குடி கிராமத்துக்கு செல்லும் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். நீலகிரி மாவட்டம், கூடலூரை அடு... மேலும் பார்க்க

முதுமலை காப்பகத்தில் சாலையோரம் நடமாடும் வன விலங்குகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் கோடை மழை பரவலாக பெய்து பசுமை திரும்பியுள்ள நிலையில், சாலையைக் கடந்து வனத்துக்குள் உலவும் வன விலங்குகளைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். நீலகிரி மாவட்டம்... மேலும் பார்க்க

உதகை அருகே பாா்சன்ஸ்வேலி பகுதியில் புலி நடமாட்டம்

நீலகிரி மாவட்டம், உதகை அருகே பாா்சன்ஸ்வேலி, போா்த்தி மந்து பகுதியில் வியாழக்கிழமை பகல் நேரத்தில் புலி ஒன்று உலவி வந்ததை அப்பகுதியில் வாகனத்தில் சென்றவா்கள் படம் பிடித்தனா். உதகை அருகே உள்ள பாா்சன்ஸ்வ... மேலும் பார்க்க