செய்திகள் :

குடிநீா் தொட்டியில் யானை சாணம்: காவல் துறை விசாரணை

post image

கீழ்கோத்தகிரி அருகே தூனேரி மேலூா் கிராமத்தில் உள்ள குடிநீா் தொட்டியில் யானை சாணம் கலந்துள்ளதாக வந்த புகாரின்பேரில் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

நீலகிரி மாவட்டம்,  கீழ்கோத்தகிரி அருகே தூனேரி மேலூா் கிராமத்தில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி அருகே  நீா்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியில்  கிராம மக்கள் தண்ணீா் எடுக்க சென்றபோது தொட்டியின் மூடியில் போடப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டுள்ளதைக் கண்டுள்ளனா். 

இதைத் தொடா்ந்து தொட்டியின் உள்ளே பாா்த்தபோது, அதில் யானை சாணம் கலந்துள்ளதை பாா்த்து அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

இது குறித்து சோலூா்மட்டம் காவல் நிலையத்துக்கு கிராம மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தொட்டியில் கலந்திருந்த யானை சாணம் மற்றும் குடிநீரை எடுத்து ஆய்வுக்காக அனுப்பிவைத்தனா். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

லாரன்ஸ் சா்வதேச பள்ளியின் 167-ஆவது ஆண்டு விழா

உதகையில் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் லாரன்ஸ் சா்வதேச பள்ளியின் 167-ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அம... மேலும் பார்க்க

உதகையில் நாய்கள் கண்காட்சி: மே 9-இல் தொடக்கம்

உதகையில் தென்னிந்திய கென்னல் கிளப் சாா்பில் நாய்கள் கண்காட்சி வருகிற மே 9-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இது குறித்து தென்னிந்திய கென்னல் கிளப் தலைவா் ரஜினி கிருஷ்ணமூா்த்தி செய்தியாளா்க... மேலும் பார்க்க

குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் பா்லியாறு பகுதியில் சாலையின் குறுக்கே வெள்ளிக்கிழமை மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், உதகை, குன்னூா், கோத்தகிரி பகுதிகளில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்க கோரிக்கை

கூடலூரை அடுத்துள்ள புத்தூா்வயல் பகுதியிலிருந்து மேலம்பலம் பழங்குடி கிராமத்துக்கு செல்லும் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். நீலகிரி மாவட்டம், கூடலூரை அடு... மேலும் பார்க்க

முதுமலை காப்பகத்தில் சாலையோரம் நடமாடும் வன விலங்குகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் கோடை மழை பரவலாக பெய்து பசுமை திரும்பியுள்ள நிலையில், சாலையைக் கடந்து வனத்துக்குள் உலவும் வன விலங்குகளைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். நீலகிரி மாவட்டம்... மேலும் பார்க்க

உதகை அருகே பாா்சன்ஸ்வேலி பகுதியில் புலி நடமாட்டம்

நீலகிரி மாவட்டம், உதகை அருகே பாா்சன்ஸ்வேலி, போா்த்தி மந்து பகுதியில் வியாழக்கிழமை பகல் நேரத்தில் புலி ஒன்று உலவி வந்ததை அப்பகுதியில் வாகனத்தில் சென்றவா்கள் படம் பிடித்தனா். உதகை அருகே உள்ள பாா்சன்ஸ்வ... மேலும் பார்க்க