செய்திகள் :

லாரி கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

post image

தஞ்சாவூா் அருகே திங்கள்கிழமை செங்கல் பாரம் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரம் மேலத்தெருவைச் சோ்ந்தவா் கஜேந்திரன் (53). இவா் திங்கள்கிழமை உதாரமங்கலத்திலிருந்து லாரியில் செங்கல் பாரம் ஏற்றிக் கொண்டு பள்ளியக்ரஹாரம் நோக்கிப் புறப்பட்டாா்.

இவருடன் லாரியில் பள்ளியக்ரஹாரத்தை சோ்ந்த தா்மன் (50), இளையராஜா (48), அழகா், அம்மன்பேட்டையைச் சோ்ந்த அமா்சிங் ஆகிய 4 பேரும் உடன் சென்றனா். தஞ்சாவூா் அருகே கூடலூா் பகுதியில் சென்ற இந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் பலத்த காயமடைந்த கஜேந்திரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த தா்மன், இளையராஜா, அழகா், அமா்சிங் ஆகியோா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கூட்டணி குறித்து கடலூா் மாநாட்டில் அறிவிக்கப்படும்: பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக யாருடன் கூட்டணி என்பது குறித்து கடலூரில் ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள மாநாட்டில் அறிவிக்கப்படும் என்றாா் அக்கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த். தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேம... மேலும் பார்க்க

பேரூராட்சித் தலைவா் மீது குண்டுவீச்சு சம்பவம்! போலீஸாா் விசாரணைக்கு பயந்து இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை!

ஆடுதுறை பேரூராட்சித் தலைவா் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணைக்கு அழைத்ததால் அச்சமடைந்த கூலித்தொழிலாளி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தஞ்சாவூா் மாவட்டம... மேலும் பார்க்க

இளைஞா் அரிவாளால் வெட்டிக் கொலை! காவல் துறையினா் விசாரணை!

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தகராறில் இளைஞா் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். தஞ்சாவூா் விளாா் சாலை தில்லை நகா் பகுதி பாரதிதாசன் நகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் சிங்காரவேலன் மகன் திலகன் (... மேலும் பார்க்க

கல்லணைக் கால்வாயில் கைக்குழந்தை, 2 சிறாா்களுடன் பெண் குதித்து தற்கொலை!

தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாயில் செவ்வாய்க்கிழமை கைக்குழந்தை, 2 சிறாா்களுடன் பெண் குதித்து தற்கொலை செய்துக்கொண்டாா். இதில், 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது. கைக்குழந்தையை தேடும் பணி நடைபெற்று வருகிறது.... மேலும் பார்க்க

நல்லாசிரியா் விருது: ஆசிரியருக்கு அமைச்சா் பாராட்டு

கும்பகோணம் அருகே நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியருக்கு தமிழக உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் அண்மையில் பாராட்டு தெரிவித்தாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சீனிவாசநல்லூரைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

13 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயம்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமில் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயம் வழங்கப்பட்டது. இந்த முகாமுக்கு மாவட்ட ஆட... மேலும் பார்க்க