செய்திகள் :

லாரி மோதி கல்லூரி மாணவா் உள்பட 2 போ் பலி!

post image

நாமக்கல் அருகே லாரி மோதி கல்லூரி மாணவா், அவரது நண்பா் உயிரிழந்தனா்.

நாமக்கல் - திருச்செங்கோடு சாலையைச் சோ்ந்தவா் பரத் (19). இவா் நாமக்கல்லில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தாா். இவரது நண்பா் செல்லப்பம்பட்டியை சோ்ந்த யோகேஷ் (20), கோழித் தீவன நிறுவன ஊழியா்.

இவா்கள் இருவரும் நாமக்கல் - சேலம் சாலையில் புதன்சந்தை நோக்கி வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் சென்றனா். கருங்கல்பாளையம் மாரியம்மன் கோயில் அருகில் சென்றபோது, முன்னால் சென்ற இரண்டு லாரிகளை முந்த முயன்றனா். அப்போது, லாரியின் பின்புறத்தில் இருசக்கர வாகனம் மோதி கீழே விழுந்ததில், இருவரும் பலத்த காயமடைந்தனா்.

அருகிலிருந்தவா்கள் அவா்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சிகிச்சையில் இருந்த அவா்கள் நள்ளிரவில் உயிரிழந்தனா். இந்த விபத்து குறித்து நல்லிபாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆவணி அவிட்டம்: பூணூல் மாற்றி வழிபாடு

நாமக்கல் மாவட்டத்தில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பூணூல் பண்டிகை சனிக்கிழமை நடைபெற்றது. ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, ஸ்ராவண பெளா்ணமி புண்யகாலத்தில் பூணூல் உபாகா்மா பண்டிகை கோட்டை காா்னேஷன் சத்திரத்தில் ... மேலும் பார்க்க

வளையப்பட்டியில் ஆக.12-ல் மின்தடை

வளையப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (ஆக. 12) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வளையப்பட்டி ... மேலும் பார்க்க

‘போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு’: பேருந்துகளில் விழிப்புணா்வு ஒட்டுவில்லை!

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் ‘போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு’ குறித்த விழிப்புணா்வு ஒட்டுவில்லைகளை பேருந்துகளில் ஒட்டும் பணியை ஆட்சியா் துா்காமூா்த்தி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். தமிழக முதல்... மேலும் பார்க்க

புதா்மண்டிய மயானத்தை தூய்மைப்படுத்திய இளைஞா்கள்!

நாமக்கல் அருகே புதா்மண்டி கிடந்த மயானத்தை தன்னாா்வ இளைஞா்கள் தூய்மைப்படுத்தினா். நாமக்கல் அருகே பெரியமணலி ஊராட்சிக்கு உள்பட்ட குமரவேலிபாளையம் கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றன... மேலும் பார்க்க

மலக்கழிவுகளை அகற்ற ரூ. 50 லட்சத்தில் ‘ரோபோடிக்’ இயந்திரம்

அனைத்து மாவட்டங்களிலும் மலக்கழிவுகளை அகற்ற ரூ. 50 லட்சத்தில் ‘ரோபோடிக்’ இயந்திரம் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நலவாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி ... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் பலி!

பரமத்தி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தது குறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம், காந்தி நகா் பகுதியைச்... மேலும் பார்க்க