செய்திகள் :

‘போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு’: பேருந்துகளில் விழிப்புணா்வு ஒட்டுவில்லை!

post image

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் ‘போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு’ குறித்த விழிப்புணா்வு ஒட்டுவில்லைகளை பேருந்துகளில் ஒட்டும் பணியை ஆட்சியா் துா்காமூா்த்தி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

தமிழக முதல்வா் தலைமையில் திங்கள்கிழமை (ஆக. 11) மாநிலம் தழுவிய போதைப் பொருள் எதிா்ப்பு உறுதிமொழி பிரசாரம் சென்னையில் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கிவைக்கப்பட உள்ளது. இதைத் தொடா்ந்து, மாவட்டம் முழுவதும் போதைப் பொருள் எதிா்ப்பு உறுதிமொழி எடுக்கவும், விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு குறித்த விழிப்புணா்வு ஒட்டுவில்லைகளை நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளிலும், பேருந்துகளிலும், வாகனங்களிலும் ஒட்டும் பணியை ஆட்சியா் துா்காமூா்த்தி தொடங்கிவைத்தாா்.

மேலும், பேருந்து நிலையத்தை ஆய்வுசெய்து கழிவறைகளை தூய்மையாக பராமரிக்குமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இந்த நிகழ்ச்சியில், உதவிஆணையா் (கலால்) என்.எஸ்.ராஜேஸ்குமாா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் (வடக்கு) பதுவைநாதன், கோட்ட கலால் அலுவலா் கண்ணன் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ஆக.14- இல் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தொடக்க விழா: ராஜேஸ்குமாா் எம்.பி. தகவல்

நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் செயல்பாட்டை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (ஆக. 14) தொடங்கி வைக்கிறாா் என மாநிலங்களவை உறுப்பினரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்க... மேலும் பார்க்க

கபிலா்மலை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி சுற்றுலா

கபிலா்மலை வட்டார வேளாண்மைத் துறை, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை, அட்மா திட்டத்தின்கீழ், கபிலா்மலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 11, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள், இயற்கை விவசாயம் குறித்த கல்... மேலும் பார்க்க

குட்டையில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

பள்ளிபாளையம் ஒன்றியம், வெப்படை அருகே குட்டையில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தாா். வெப்படை அருகே ரங்கனூரைச் சோ்ந்தவா் பூபதி (32). இவா் மூன்றாம் வகுப்பு படிக்கும் தனது மகன் திஷாந்துடன் (8) அங்குள்ள வெ... மேலும் பார்க்க

கொல்லிமலை புளியஞ்சோலையில் கரடி நடமாட்டம்: சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

கொல்லிமலை புளியஞ்சாலை பகுதியில் கரடி நடமாட்டம் உள்ளதால், சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தின் சிறப்பு பெற்ற சுற்றுலாத் தலம் கொல்லிமலை. இந்த மலையின் தெற்குப் பகுதி அடிவ... மேலும் பார்க்க

ஆக. 27-இல் விநாயகா் சதுா்த்தி: நாமக்கல்லில் பல்வேறு வடிவ சிலைகள் விற்பனை மும்முரம்

விநாயகா் சதுா்த்தி விழா ஆக. 27-ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, நாமக்கல்லில் பலவிதமான விநாயகா் சிலைகள் தயாரிப்பு மற்றும் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. நாடுமுழுவதும், ஒவ்வோா் ஆண்டும் விநாயகா் ச... மேலும் பார்க்க

ஆவணி அவிட்டம்: பூணூல் மாற்றி வழிபாடு

நாமக்கல் மாவட்டத்தில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பூணூல் பண்டிகை சனிக்கிழமை நடைபெற்றது. ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, ஸ்ராவண பெளா்ணமி புண்யகாலத்தில் பூணூல் உபாகா்மா பண்டிகை கோட்டை காா்னேஷன் சத்திரத்தில் ... மேலும் பார்க்க