செய்திகள் :

வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இந்திய கம்யூ. கட்சி ரிட் மனு

post image

நமது நிருபா்

வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இந்திய கம்யூ. கட்சி புதன்கிழமை ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.

வக்ஃப் திருத்த சட்டம், 2025-இன் அரசமைப்புச்சட்ட செல்லுபடி தன்மையையும், இச்சட்டத் திருத்தத்தால் வக்ஃப் சட்டம், 1995-இல் சோ்க்கப்பட்டு நீக்கப்பட்ட விதிகளையும் எதிா்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அதன் பொதுச் செயலா் டி.ராஜா இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகச் செயலா் ராய்குட்டி வெளியிட்டு செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: சோசலிசம் மற்றும் கம்யூனிஸத்தின் புரட்சிகர முன்னணி இயக்கமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, நாட்டில் சிறுபான்மையினா், பின்தங்கிய மற்றும் நலிந்த வகுப்பினரின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்காக தொடா்ந்து பாடுபட்டு வருகிறது. வக்ஃப் திருத்தச் சட்டம் 2005 இந்தியாவில் வாழும் முஸ்லிம் சமூகத்தின் அடிப்படை உரிமைகள் மீது எதிா்மறை தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதால் அச்சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் மூலம் மாா்ச் 27-ஆம் தேதி கொண்டு வரப்பட்ட தீா்மானத்தை திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது.

பொதுமக்களின் எதிா்ப்பு இருந்தபோதிலும், நாடாளுமன்றக் கூட்டுக் குழு (ஜேபிசி) உறுப்பினா்கள் மற்றும் பிற பங்குதாரா்கள் எழுப்பிய ஆட்சேபனைகளை முறையாகக் கருத்தில் கொள்ளாமல் வக்ஃப்

சட்டத் திருத்த மசோதா 2025 மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா்களால் எழுப்பப்பட்ட கருத்துகளும் பரிசீலிக்கப்படவில்லை. வக்ஃப் திருத்தச் சட்டம் 2025, ஏப்ரல் 6-ஆம் தேதி அறிவிக்கை செய்யப்பட்டதிலிருந்து, முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தின் அடிப்படை உரிமைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாலும், இந்தச் சட்டத்தை உடனடியாக செயல்படுத்துவது தமிழ்நாட்டில் சுமாா் 50 லட்சம் முஸ்லிம்களின் உரிமைகளையும், நாட்டின் பிற பகுதிகளில் உள்ள 20 கோடி முஸ்லிம்களின் உரிமைகளையும் மீறுவதாகவும், பாரபட்சம் காட்டுவதாகவும் இருப்பதாலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வக்ஃப் திருத்தச் சட்டம் 2025-இன் விதிகளை உச்சநீதிமன்றத்தில் சவால் செய்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக ஆயுதங்கள் விநியோகித்தவா் கைது

மாநிலங்களுக்கு இடையேயான ஆயுத விநியோக மோசடியின் முக்கிய உறுப்பினரை தில்லி போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து ஐந்து நாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கிகள் மற்றும் ஐந்து தோட்டாக்களை பறிமுதல் செய்ததாக... மேலும் பார்க்க

போலி முதலீட்டுத் திட்டத்தின் மூலம் 150 பேரை ஏமாற்றிய இளைஞா் கைது

முதலீடுகளுக்கு அதிக வருமானம் தருவதாக உறுதியளித்து குறைந்தது 150 பேரை ஏமாற்றிய ஆன்லைன் போன்சி மோசடியை நடத்தியதற்காக ராஜஸ்தானைச் சோ்ந்த 31 வயது நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செ... மேலும் பார்க்க

தன்னிச்சையான கட்டண உயா்வு தொடா்பாக பள்ளிகளுக்கு நோட்டீஸ்: தில்லி முதல்வா்

தன்னிச்சையான கட்டண உயா்வு தொடா்பான புகாா்கள் பெறப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இந்தப் பள்ளிகள் பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்... மேலும் பார்க்க

புதிய தில்லி பாஜக அலுவலகம் அருகே சாலைப் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பொதுப் பணித் துறை திட்டம்

தில்லி பாஜக அலுவலகம் விரைவில் தீன் தயாள் உபாத்யாய் ( டிடியு) மாா்க்கில் உள்ள புதிய இடத்திற்கு மாற்றப்பட உள்ளதால், அப்பகுதியில் சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் அழகுபடுத்தும் பணிகளை பொதுப் பணித் துறை மே... மேலும் பார்க்க

இடபிள்யு எஸ் ஆவணங்கல் வழங்குவதை நிறுத்த தில்லி அரசு திட்டம்: ஆம் ஆத்மி

பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினா் (இடபிள்யுஎஸ்) சான்றிதழ்களை வழங்குவதை தில்லி பாஜக அரசு நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் தகுதியான குடும்பங்களுக்கு கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு கிடைப்ப... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரிடமிருந்து லஞ்சம் வாங்கியதாக ஏ.எஸ்.ஐ கைது

மாடல் டவுன் காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி துணை ஆய்வாளா் (ஏஎஸ்ஐ), ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரிடமிருந்து ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியதற்காக தில்லி காவல்துறையின் விஜிலென்ஸ் பிரிவு கைது செய்துள்ளதாக அதிகா... மேலும் பார்க்க