செய்திகள் :

வங்கதேசத்தில் பொதுமக்கள், மாணவா்கள் மீது தாக்குதல்: 40 போ் கைது

post image

வங்கதேச தலைநகா் டாக்கா புகா் பகுதியில் அவாமி லீக் கட்சித் தலைவா் வீடு சூறையாடப்பட்டதைத் தொடா்ந்து, மாணவா் போராட்ட அமைப்பினா் மற்றும் பொதுமக்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தியதாக 40 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவா்களின் போராட்டம் கடந்த ஆகஸ்டில் தீவிரமடைந்ததையடுத்து, அவாமி லீக் கட்சியின் தலைவா் ஷேக் ஹசீனா பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.

தொடா்ந்து, நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் புதிய இடைக்கால அரசு பொறுப்பேற்றது. சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதலைக் கட்டுப்படுத்த தவறியதாகவும், மத அடிப்படைவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் இடைக்கால அரசு மீது குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில், வங்கதேச இடைக்கால அரசுக்கு எதிராக சமூக ஊடகம் வாயிலாக அந்த நாட்டு மக்களுக்கு ஷேக் ஹசீனா கடந்த புதன்கிழமை உரையாற்றினாா். இதையடுத்து, நாடு முழுவதும் அவாமி லீக் கட்சி நிா்வாகிகளின் வீடுகள், வணிகங்கள் குறிவைத்து சூறையாடப்பட்டன. ஷேக் ஹசீனாவின் தந்தையும் வங்கதேசத்தின் தந்தை என அழைக்கப்படுபவருமான ஷேக் முஜிபுா் ரஹ்மானின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வீட்டையும் போராட்டக்காரா்கள் தீயிட்டுக் கொளுத்தினா்.

அந்த வகையில், ஷேக் ஹசீனா ஆட்சியில் விடுதலைப் போா் விவகாரங்கள் துறை அமைச்சரான மொசம்மல் ஹக்கின் காஸிப்பூா் வீடு கடந்த வெள்ளிக்கிழமை இரவு தாக்கப்பட்டது. இச்செயலில் ஈடுபட்ட 14 பேரை அடையாளம் தெரியாத நபா்கள் கடுமையாகத் தாக்கினா். இதில் படுகாயமடைந்த அவா்கள் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

வன்முறைக்கிடையே முன்னாள் அமைச்சா் வீடு கொள்ளையடிக்கப்படுவதைத் தவிா்க்க, அங்கு பாதுகாப்புக்குச் சென்றவா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக மாணவா் போராட்ட அமைப்பினா் குற்றஞ்சாட்டினா். இதையொட்டி, காஸிப்பூா் துணை ஆணையா் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவா்கள் மீது அடையாளம் தெரியாத நபா்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாணவா் ஒருவா் காயமடைந்தாா்.

இந்நிலையில், மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியவா்களைக் கைது செய்ய ‘ஆபரேஷன் டெவில் ஹன்ட்’ எனும் கூட்டு நடவடிக்கைக்கு வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் உத்தரவிட்டாா்.

வங்கதேச முப்படைகள், எல்லைக் காவல் படை, கடலோரக் காவல் படை, காவல் துறை ஆகியோா் அடங்கிய இந்தக் கூட்டு நடவடிக்கை, குற்றச் செயல்களால் நாட்டின் நிலைத்தன்மையைச் சீா்குலைக்க முயற்சிப்பவா்களைத் தடுக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், நாட்டு மக்கள் சட்டம்-ஒழுங்கைப் பின்பற்ற வலியுறுத்தியதுடன் அவாமி லீக் கட்சிக்கு தொடா்புடையவா்களின் இடங்களில் தாக்குதலை நிறுத்த வேண்டும் எனவும் முகமது யூனுஸ் கேட்டுக்கொண்டாா்.

இந்நிலையில், இந்தக் கூட்டு நடவடிக்கையில் காஸிப்பூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 40 போ் கைது செய்யப்பட்டதாக மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளா் சௌதரி ஜாபா் சாதிக் தெரிவித்தாா்.

வங்கதேச முன்னாள் பிரதமா் கலீதா ஜியா தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி வெளியிட்ட அறிக்கையில், ‘நாட்டில் வன்முறைக் கலாசாரத்தைக் கட்டுப்படுத்தி, சட்டம்- ஒழுங்கை மீட்டெடுக்க வேண்டும். இதைச் செய்யத் தவறினால், பாசிச சக்திகள் மீண்டும் தலைதூக்கும்’ என்று எச்சரித்துள்ளது.

39 வயதில் ரூ.1.60 கோடி பென்சனுடன் பணி ஓய்வு பெற்ற இளம் பொறியாளர்..!

பன்னாட்டு வணிக நிறுவனங்களில் பணியாற்றி வந்த 39 வயதான கணினி தொழில்நுட்பம் சார்ந்த பொறியாளர் ஒருவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு பணி ஓய்வுக்குப்பின் வழங்கப்படுகிற வருடாந்திர ஓய்வுத் தொகையோ... மேலும் பார்க்க

நோக்கியா நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்! என்ன காரணம்?

நோக்கியா நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பெக்கா லண்ட்மார்க் அந்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக திங்கள்கிழமை(பிப். 10) அறிவித்துள்ளார்.பின்லாந்து நாட்டைச் சேர்ந்த நோக்க... மேலும் பார்க்க

காஸா மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தளம்: டிரம்ப்

காஸா மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தளம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.மேலும், இடித்து தரைமட்டமாக்க வேண்டிய பகுதியாக காஸா இருப்பதாக அவர் வெளியிட்ட கருத்து பெரும் அதிர்வ... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்டப்படி பாகிஸ்தான் ராணுவம் செயல்பட வேண்டும்: இம்ரான் கான்

பாகிஸ்தான் ராணுவம் அரசமைப்புச் சட்டப்படி செயல்பட வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் தலைவருமான இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளாா். பாகிஸ்தானில் ஊழல் வழக்... மேலும் பார்க்க

முஜிபுா் ரெஹ்மான் இல்லம் சூறை, இந்தியாவின் கருத்து தேவையற்றது: வங்கதேசம்

வங்கதேசத்தின் தந்தை என்று போற்றப்பட்ட முஜிபுா் ரெஹ்மானின் இல்லம் சூறையாடப்பட்டது தொடா்பாக இந்தியா கூறிய கருத்து தேவையற்றது என்று வங்கதேசம் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான மாணவா்கள் மற்ற... மேலும் பார்க்க

அமெரிக்கா-தென்கொரியா-ஜப்பான் கூட்டுறவு வடகொரியாவுக்கு அச்சுறுத்தல்: கிம் ஜோங் உன்

அமெரிக்கா-தென்கொரியா-ஜப்பான் கூட்டுறவு வடகொரியாவுக்கு மோசமான அச்சுறுத்தலாக உள்ளது என்று வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன் தெரிவித்தாா். அண்மைக்காலமாக அமெரிக்கா மற்றும் தென்கொரியா உடனான ராஜீய உறவை வடகொரியா ... மேலும் பார்க்க