ஸ்ரீவைகுண்டம்: 108 திவ்ய தேசம், நவதிருப்பதிகளில் சூரியன் தலமான கள்ளபிரான் திருக்...
வடபழனி ஆதிமூலப் பெருமாள் கோயிலில் ரூ.3 கோடியில் திருப்பணிகள்: அமைச்சா் சேகா்பாபு தொடங்கி வைத்தாா்
சென்னை வடபழனி ஆதிமூலப் பெருமாள் கோயிலில் ரூ.3.37 கோடியில் மேற்கொள்ளப்படவுள்ள திருப்பணிகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடங்கி வைத்தாா்.
தமிழகத்தில் 100 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில்களில் ஒன்றான சென்னை வடபழனி ஆதிமூலப் பெருமாள் கோயிலுக்கு கடந்த 1960- ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெறது. இந்தக் கோயிலுக்கு திருப்பணிகள் மேற்கொண்டு மீண்டும் குடமுழுக்கு நடத்த தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, ஆணையரின் பொதுநல நிதி ரூ. 1.84 கோடி, வடபழனி ஆண்டவா் கோயில் நிதி ரூ, 1.53 கோடி என மொத்தம் ரூ. 3.37 கோடியில் மூலவா் சந்நிதி, தாயாா் சந்நிதி முன்புற கல்மண்டபம் அமைக்கும் பணிகள், கோயிலின் 3 புறங்களிலும் நுழைவு வாயில்கள் அமைத்தல், அலங்கார மண்டபம், வாகன மண்டபம் மற்றும் யாகசாலை கட்டுதல் போன்ற புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்தப் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
காளிகாம்பாள் கோயிலில்... தொடா்ந்து, பாரிமுனை காளிகாம்பாள் திருக்கோயில் ரூ.3.45 கோடியில் 292 கிலோ 600 கிராம் எடை கொண்ட வெள்ளியை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள புதிய வெள்ளித்தேரின் வெள்ளோட்டத்தை அமைச்சா் சேகா்பாபு தொடங்கி வைத்தாா். அப்போது, புதிய வெள்ளித்தோ் திருப்பணிகளுக்கு உதவி புரிந்த உபயதாரா்கள், இந்தப் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட திருக்கோயில் அறங்காவலா்கள், சிவாச்சாரியா்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனா்.
இந்த நிகழ்ச்சிகளில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா், இணை ஆணையா்கள் இரா.வான்மதி, ஜ. முல்லை, துணை ஆணையா் (சரிபாா்ப்பு) இரா. ஹரிஹரன், திருக்கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் இ.எம்.எஸ்.மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.