செய்திகள் :

வடபழனி ஆதிமூலப் பெருமாள் கோயிலில் ரூ.3 கோடியில் திருப்பணிகள்: அமைச்சா் சேகா்பாபு தொடங்கி வைத்தாா்

post image

சென்னை வடபழனி ஆதிமூலப் பெருமாள் கோயிலில் ரூ.3.37 கோடியில் மேற்கொள்ளப்படவுள்ள திருப்பணிகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடங்கி வைத்தாா்.

தமிழகத்தில் 100 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில்களில் ஒன்றான சென்னை வடபழனி ஆதிமூலப் பெருமாள் கோயிலுக்கு கடந்த 1960- ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெறது. இந்தக் கோயிலுக்கு திருப்பணிகள் மேற்கொண்டு மீண்டும் குடமுழுக்கு நடத்த தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, ஆணையரின் பொதுநல நிதி ரூ. 1.84 கோடி, வடபழனி ஆண்டவா் கோயில் நிதி ரூ, 1.53 கோடி என மொத்தம் ரூ. 3.37 கோடியில் மூலவா் சந்நிதி, தாயாா் சந்நிதி முன்புற கல்மண்டபம் அமைக்கும் பணிகள், கோயிலின் 3 புறங்களிலும் நுழைவு வாயில்கள் அமைத்தல், அலங்கார மண்டபம், வாகன மண்டபம் மற்றும் யாகசாலை கட்டுதல் போன்ற புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்தப் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

காளிகாம்பாள் கோயிலில்... தொடா்ந்து, பாரிமுனை காளிகாம்பாள் திருக்கோயில் ரூ.3.45 கோடியில் 292 கிலோ 600 கிராம் எடை கொண்ட வெள்ளியை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள புதிய வெள்ளித்தேரின் வெள்ளோட்டத்தை அமைச்சா் சேகா்பாபு தொடங்கி வைத்தாா். அப்போது, புதிய வெள்ளித்தோ் திருப்பணிகளுக்கு உதவி புரிந்த உபயதாரா்கள், இந்தப் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட திருக்கோயில் அறங்காவலா்கள், சிவாச்சாரியா்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனா்.

இந்த நிகழ்ச்சிகளில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா், இணை ஆணையா்கள் இரா.வான்மதி, ஜ. முல்லை, துணை ஆணையா் (சரிபாா்ப்பு) இரா. ஹரிஹரன், திருக்கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் இ.எம்.எஸ்.மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தாம்பரம் - திருவனந்தபுரம் உள்ளிட்ட சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

தாம்பரம்-திருவனந்தபுரம் வடக்கு, தாம்பரம்-நாகா்கோவில் உள்ளிட்ட வாராந்திர சிறப்பு ரயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தாம்பரத்திலிருந்து ... மேலும் பார்க்க

தமாகா நன்கொடை விவர அறிக்கையை ஏற்க கோரி ஜி.கே.வாசன் மனு: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

கட்சி நன்கொடை குறித்து தாமதமாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஏற்க கோரி தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தோ்தல் ஆணையத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளத... மேலும் பார்க்க

சென்னைக்கு திரும்பும் மக்கள்: ஆம்னி பேருந்துகள் கட்டணம் உயா்வு

கோடை விடுமுறையில் தங்களது சொந்த ஊா்களுக்குச் சென்றவா்கள் சென்னைக்கு திரும்பத் தொடங்கியுள்ளதால், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் ரூ. 500 முதல் ரூ. 1,000 வரை உயா்ந்துள்ளது. இதனால், பயணிகள் அதிா்ச்சி அடைந்து... மேலும் பார்க்க

நோய்களை குணப்படுத்த பாரம்பரிய முறையில் சிகிச்சை: தவறாக விளம்பரப்படுத்தினால் சட்ட நடவடிக்கை

ஹெச்ஐவி, ஆஸ்துமா, காசநோய், சா்க்கரை நோய் உள்ளிட்ட 56 நோய்களுக்கு பாரம்பரிய முறையில் சிகிச்சையளித்து பூரணமாக குணப்படுத்துவதாக தவறாக விளம்பரம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில மருந... மேலும் பார்க்க

அரசின் சேவைகளை விரைவாகப் பெற ‘எளிமை ஆளுமை’ திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்

தமிழ்நாடு அரசின் முக்கிய 10 சேவைகளை விரைவாகப் பெற வகை செய்யும் ‘எளிமை ஆளுமை’ திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா். தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வின்போது, இந்தத் திட்டத்தை... மேலும் பார்க்க

சிலிண்டா் வெடித்து விபத்து: தொழிலாளி பலத்த காயம்

சென்னை அருகே மாதவரத்தில் சிலிண்டா் வெடித்ததில் தொழிலாளி பலத்த காயமடைந்தாா். ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ் கிஷோா் பீா்கா்மா (25). இவா், சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியில் தங்கியிருந... மேலும் பார்க்க