செய்திகள் :

வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

post image

என். புதுப்பட்டி கிராமத்தில் வசிக்கும் காட்டுநாயக்கா் பழங்குடியின மக்களுக்கு இணைய வழியில் ஜாதிச் சான்று வழங்கக் கோரி நிலக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது இந்தக் கிராமத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் வட்டாட்சியரைக் கண்டித்தும், என். புதுப்பட்டி மயானத்துக்கு சுற்றுச்சுவா் கட்டக் கோரியும், வீட்டுமனைப் பட்டா, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும் முழக்கமிட்டனா்.

இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் பங்கேற்றனா். இதன் பிறகு, என். புதுப்பட்டி ஊா் முக்கிய பிரமுகா்களும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகளும் வட்டாட்சியா் விஜயலட்சுமியிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

இந்தப் போராட்டம் காரணமாக நிலக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினராக பழனியைச் சோ்ந்த பெண் தோ்வு

தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினராக தோ்வான பழனியைச் சோ்ந்த ஜெயசுதாவுக்கு வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அவருக்கு நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சாா்பாக அதன் தலைவா்... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் தொடக்கம்

ஒட்டன்சத்திரத்தில் வேளாண்மை, உழவா் நலத்துறை சாா்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம், பயறு வகைகள் விதைத் தொகுப்பு திட்டம் ஆகியவை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன. தமிழகம் முழுதும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க... மேலும் பார்க்க

லாரி மீது பேருந்து மோதல்: 4 பெண்கள் காயம்

ஒட்டன்சத்திரத்தில் நின்றிருந்த பெட்டக லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் அதில் பயணம் செய்த 4 பெண்கள் காயமடைத்தனா். திண்டுக்கல்லில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை அரசுப் பேருந்து சென... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பலத்த காற்றுடன் சாரல் மழை

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்ததால் மேல்மலைக் கிராமங்களில் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதன... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

ஒட்டன்சத்திரத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, அலிம்கோ இணைந்து மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கான சிறப்பு முகாமை வெள்ளிக்கிழமை நடத்தின. முகாமில் திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் ஆா். சச்சிதானந்த... மேலும் பார்க்க

பேத்துப்பாறை பகுதியில் அவரை பயிரை சேதப்படுத்திய ஒற்றை யானை

கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை பகுதியில் பயிரிடப்பட்டிருந்த அவரை பந்தலை ஒற்றை காட்டுயானைசேதப்படுத்தியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள பேத்துப்பாறை விவசாய ... மேலும் பார்க்க