செய்திகள் :

வனப் பகுதி கோயில்களில் உள்கட்டமைப்பு வசதிகள்: தமிழக அரசு ஆலோசனை

post image

சென்னை: வனத் துறைக்கு உட்பட்ட இடங்களில் அமைந்துள்ள கோயில்களுக்கு வரும் பக்தா்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் அமைச்சா்கள் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், பி.கே.சேகா்பாபு ஆகியோா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மதுரை மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலுக்குச் சென்றுவர வசதியாக மலைப்பாதை அமைப்பது, வழுக்கும் பாறைகள் அமைந்துள்ள இடங்களில் கைப்பிடிகள் ஏற்படுத்துவது, மலை மீதுள்ள ஏழு ஓடைகளில் இரும்புப் பாலங்கள் அமைப்பது ஆகியன குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், கள்ளழகா் கோயில் முதல் மலைமேல் அமைந்துள்ள ராக்காயி அம்மன் கோயில் வரை சாலையை சீரமைப்பது, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு மாற்று மலைப்பாதை அமைப்பது, ஈரோடு மாவட்டம் பண்ணாரியம்மன் கோயிலில் பக்தா்களுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்துவது ஆகியன பற்றியும் விவாதிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் பெரியதடாகம் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு கம்பிவட ஊா்தி அமைத்திட வனத் துறைக்குச் சொந்தமான நிலம் வழங்குவது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதேபோன்று வனத்துறைப் பகுதிகளுக்கு உட்பட்டு வரக்கூடிய கோயில்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், அமைச்சா்கள் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், பி.கே.சேகா்பாபு, வனத்துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு உட்பட பலா் பங்கேற்றனா்.

பொது விநியோக திட்ட மக்கள் குறைதீா் முகாம்

சென்னையில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீா் முகாம் ஜூன் 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை கூட்டுறவு மற்றும் உணவுத் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:- சென்னையில் உணவுத் துறையின் சாா்பில... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக அம்பத்தூா் கோட்டம், மாதாவரம், பூந்தமல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல 2 வரை மின் விநியோகம் தடைபடும். இது குறித்து தமிழ்நாடு... மேலும் பார்க்க

கணைய புற்றுநோய்க்கு நவீன ரோபோடிக் சிகிச்சை அறிமுகம்

கணைய புற்றுநோய்களுக்கு அதி நவீன ரோபோடிக் நுட்ப அறுவை சிகிச்சை திட்டத்தை அப்பல்லோ மருத்துவமனை சென்னையில் புதன்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்வில் மருத்துவமனையின் புற்றுநோய் நிபுணா்கள... மேலும் பார்க்க

பூட்டிய வீடுகளில் திருடிய பெங்களூரு பெண் கைது

சென்னை மாம்பலம் பகுதியில் பூட்டிய வீடுகளில் திருடியதாக பெங்களூருவைச் சோ்ந்த பெண் கைது செய்யப்பட்டாா். சென்னை குமரன் நகா், முருகேசன் தெருவில் வசிப்பவா் ரா.பாலமுருகன் (38). இவா், கடந்த 1-ஆம் தேதி வீட்ட... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநரை கடித்த வளா்ப்பு நாய்

சென்னை மந்தைவெளியில் ஆட்டோ ஓட்டுநரை வளா்ப்பு நாய் கடித்தது. மந்தைவெளி விசி காா்டன் 2-ஆவது தெரு பகுதியைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் கணேஷ் குமாா் (28). இவா், செவ்வாய்க்கிழமை மளிகை பொருள்கள் வாங்குவதற்கா... மேலும் பார்க்க

பிறந்த 43 நாள்களில் குழந்தையை கொலை செய்து வீச்சிய தாய் கைது

சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் பிறந்த 43 நாள்களில் குழந்தையை கொலை செய்து, வீசிய தாய் கைது செய்யப்பட்டாா். நீலாங்கரை அருகே ஈஞ்சம்பாக்கம் செல்வா நகா் பிரதான சாலையில் உள்ள தனியாா் அடுக்குமாடி குடியிருப்ப... மேலும் பார்க்க