செய்திகள் :

வருண் சக்கரவர்த்திக்கு அபிஷேக் சர்மா பாராட்டு!

post image

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தியை தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா பாராட்டியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நேற்று (ஜனவரி 22) தொடங்கியது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வருண் சக்கரவர்த்திக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இதையும் படிக்க: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஷஸ் தொடரை வென்ற ஆஸ்திரேலியா!

ஆட்டத்தின் போக்கை மாற்றுபவர்

அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய வருண் சக்கரவர்த்தியை தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா பாராட்டியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

அபிஷேக் சர்மா

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த சில டி20 தொடர்களை எடுத்துக் கொள்ளுங்கள். இந்திய அணிக்கு வருண் சக்கரவர்த்தி ஆட்டத்தின் போக்கை மாற்றுபவராக இருந்துள்ளார். டி20 போட்டிகளில் பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளங்கள் இருப்பது வழக்கம். அந்த மாதிரியான சூழலில் அணியில் முக்கியமான பந்துவீச்சாளரை நம்பியிருப்பது மிகவும் முக்கியம். வருண் சக்கரவர்த்திக்கு எதிராக சிறப்பாக விளையாட எதிரணியினர் சிரமப்படுகின்றனர். அவர் மட்டுமல்லாது, ரவி பிஷ்னோய் மற்றும் அக்‌ஷர் படேலும் சிறப்பாக பந்துவீசினர்.

இதையும் படிக்க: தோல்விக்கு காரணம் என்ன? விளக்கமளித்த ஜோஸ் பட்லர்!

ஒரு பேட்ஸ்மேனாக 4 - 5 இன்னிங்ஸ்களில் சரியாக விளையாடவில்லை என்றால், அவரது மனநிலை எப்படி இருக்கும் என யோசித்துப் பாருங்கள். ஆனால், அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இருவரும் வீரர்களின் திறமை மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு ஆதரவளிக்கின்றனர். நான் சில போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்ற போதிலும், உங்களால் அணிக்காக போட்டியை வென்று கொடுக்க முடியும் என எனக்கு கௌதம் கம்பீரும், சூர்யகுமார் யாதவும் ஆதரவளித்தனர் என்றார்.

நேற்றையப் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரூக் மற்றும் லியம் லிவிங்ஸ்டன் இருவரின் விக்கெட்டுகளையும் வருண் சக்கரவர்த்தி ஒரே ஓவரில் வீழ்த்தியது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

பிசிசிஐ விருதுகள்: யார் யாருக்கு என்னென்ன விருதுகள்? முழு விவரம்!

இந்தியாவுக்காக கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கும் நமன் விருதுகள் விழா நேற்று (பிப்ரவரி 1) மும்பையில் நடைபெற்றது.வாழ்நாள் சாதனையாளர் விருது - சச்சின் டெண்டுல்கர்பிசிசிஐ சார்... மேலும் பார்க்க

இங்கிலாந்தை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மை... மேலும் பார்க்க

இந்திய அணிக்காக அதிகபட்ச ரன்கள் குவித்து அபிஷேக் சர்மா சாதனை; இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் அபிஷேக் சர்மாவின் அதிரடியான சதத்தால் இந்திய அணி 247 ரன்கள் குவித்துள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மு... மேலும் பார்க்க

17 பந்துகளில் அரைசதம், 37 பந்துகளில் சதம்; வான்கடேவில் அபிஷேக் சர்மா சிக்ஸர் மழை!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் அபிஷேக் சர்மா 37 பந்துகளில் அதிரடியாக சதம் விளாசி அசத்தினார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி ... மேலும் பார்க்க

17 பந்துகளில் அரைசதம்; அபிஷேக் சர்மா சாதனை!

டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அதிவேகமாக அரைசதம் அடித்த 2-வது வீரர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா படைத்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வா... மேலும் பார்க்க

டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக ஜோஸ் பட்லர் புதிய சாதனை!

டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி புணே மைதானத்தில் நேற்று முன் தி... மேலும் பார்க்க