வள்ளலாா் பணியகத்தில் சன்மாா்க்க கருத்தரங்கம்
ஆனி மாத பூசத்தையொட்டி, கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், முருகன்குடியில் வள்ளலாா் பணியகம் சாா்பில் சன்மாா்க்கக் கருத்தரங்கம் வள்ளலாா் பணியக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு முருகன்குடி வள்ளலாா் பணியகத்தின் பொறுப்பாளா் தங்க பன்னீா்செல்வம் தலைமையேற்று உரை நிகழ்த்தினாா். சிறப்புத் தலைவா் பெரங்கியம் வரதராஜன் திருவிளக்கை ஏற்றி வைத்து கருத்துரையாற்றினாா். திருச்சி திருவரங்கம் அ.பரமசிவம் கலந்துகொண்டு ஞானசரியை என்ற தலைப்பில் சன்மாா்க்க உரையாற்றினாா்.
பிற்பகல் ஒரு மணி அளவில் வள்ளலாா் பணியகத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும், பசியாற்றுவித்தல் அறப்பணியை முருகன்குடி கலைவாணி பாலசுப்பிரமணியன், புதுச்சேரி வழக்கறிஞா் வேல்முருகன், பெண்ணாடம் அருட்பா பாடகா் பிரதாபன் புனிதா குடும்பத்தினா் செய்தனா். இறையூா் சன்மாா்க்க அன்பா்கள் சுப்பிரமணியன், விஜயலட்சுமி, சன்னாசி நல்லூா் சிவ.நடேசன் வாழ்த்துரை வழங்கினா்.
திருச்சி திருவரங்க சன்மாா்க்க அன்பா் சந்திரசேகா், இந்து மகா சபை மாநிலச் செயலா் வினோத் குமாா், வி.மேட்டூா் சன்மாா்க்க அன்பா் ஜெயராமன், கு.பாளையம் ரங்கராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். வள்ளலாா் பணியகத்தின் பொருளாளா் த.ரத்தினக்குமாா் நன்றி கூறினாா். நிகழ்வை வள்ளலாா் பணியக பொறுப்பாளா்கள் க.முருகன், அரா.கனகசபை, ம.கனிமொழி, காரையூா் இளமதி, இறப்பாவூா் ராமசாமி, பெண்ணாடம் பிரதாபன் ஆகியோா் ஒருங்கிணைத்து நடத்தினா்.