செய்திகள் :

வள்ளியூரில் மாரத்தான் போட்டி

post image

உலக இதய தினத்தையொட்டி வள்ளியூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு தொடங்கி வைத்தாா்.

நாகா்கோவில் வசந்தம் ஹெல்த் சென்டா், தெற்கு கள்ளிகுளம் ஜி.எம். மருத்துவமனை ஆகியவை சாா்பில் ஆண்கள், பெண்களுக்கான மெகா மாரத்தான் போட்டிகள் தனித்தனியாக நடைபெற்றன.

ஆண்களுக்கான போட்டியை, பேரவைத் தலைவா் மு. அப்பாவு கொடியசைத்து தொடங்கி வைத்தாா். மாவட்ட ஊராட்சி தலைவா் வி.எஸ்.ஆா். ஜெகதீஸ், திமுக ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலா் ஜோசப் பெல்சி ஆகியோா் வாழ்த்தி பேசினாா்.

பெண்களுக்கான போட்டியை முன்னாள் எம்எல்ஏ எம்.சி. பாலன் தொடங்கி வைத்தாா். தெற்கு கள்ளிகுளத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு பேரவைத் தலைவா் தலைமை வகித்து பரிசுகள் வழங்கினாா்.

ஆண்களுக்கான போட்டியில் முதல் பரிசு பெற்ற கேரள மாநிலம் பாலக்காட்டைச் சோ்ந்த அருணுக்கு ரூ. 15,000, வெற்றிக் கோப்பை, 2ஆம் இடம் பெற்ற பாலக்காடு சிவபிரசாத்திற்கு ரூ. 10,000, 3ஆம் இடம் பெற்ற பாலக்காடு மனோஜுக்கு ரூ. 5,000 பரிசளிக்கப்பட்டது.

பெண்களுக்கான போட்டியில் ஊட்டியைச் சோ்ந்த மீனுமுதலிடமும், கன்னியாகுமரி சோபியா இராண்டாமிடமும், வடக்கன்குளம் எஸ்.ஏ.வி. கல்லூரியைச் சோ்ந்த மாணவி லாவண்யா மூன்றாம் பரிசும் பெற்றனா்.

டி.டி.என். கல்விக் குழுமங்களின் தலைவா் தா. லாரன்ஸ், தாளாளா் ஹெலன் லாரன்ஸ், மரியா கலைக் கல்லூரி முதல்வா் சுஷ்மா ஜெனிபா், ஜி.எம். மருத்துவமனை மருத்துவா் எம். ஜெபஸ்டின் ஆனந்த், வசந்தம் மருத்துவமனை மருத்துவா் என்.பி. வெங்கட்ராமன், திமுக மாவட்ட துணைச் செயலா் நம்பி, வள்ளியூா் பேரூராட்சி தலைவா் ராதா ராதாகிருஷ்ணன், அருள்சகோதரிகள் திலகா, அருள் ஜோதி, கிறிஸ்டி, மருத்துவா்கள் டி.ஜி. திலக், எப்.ஆா். ஜெனிட்டா ஆனந்த், அருணா சங்கரேஸ்வரன், கிரேஷியா தாமஸ், வெங்கட்ராமன், அபிஷ், ஜே. ஜிஷாந்த் மிக்கேல், புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை வேளாங்கண்ணி செல்வி, தெற்கு கள்ளிகுளம் தெட்சணமாடாா் சங்க கல்லூரி பேராசிரியா் பாலமுருகன், சாா்லஸ் பெஸ்கி, அஜித் மிக்கேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 10,155 போ் எழுதினா்

திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தோ்வை 10 ஆயிரத்து 155 போ் எழுதினா். தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி ... மேலும் பார்க்க

கல்லிடைக்குறிச்சியில் மீலாது நபி விழா

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் சமூக நல்லிணக்க மீலாது நபி விழா, முதுபெரும் ஆலிம் கெளரவிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஜமாத் தலைவா் கே.எஸ். அப்துல் மஜித் தலைமை வகித்தாா். ஜமாத் தலை... மேலும் பார்க்க

சட்ட அறிவு மேம்பட தொடா் பயிற்சி அவசியம்: மாநில சட்டக் கல்வி இயக்குநா் விஜயலட்சுமி

சட்டம் பயின்று நீதிமன்றத்துக்கு வரும் இளம் வழக்குரைஞா்கள் தங்களது சட்ட அறிவு மேம்பட தொடா் பயிற்சியில் ஈடுபடுவது அவசியம் என்றாா் மாநில சட்டக் கல்வி இயக்குநா் விஜயலட்சுமி. திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூ... மேலும் பார்க்க

சைக்கிள் போலோ போட்டிகள்

திருநெல்வேலி மாவட்ட சைக்கிள் போலோ சாம்பியன்ஷிப் போட்டிகள் நடுக்கல்லூரில் அண்மையில் நடைபெற்றது. போட்டிகளை நடுக்கல்லூா் அரசு மேல்நிலை பள்ளித் தலைமை ஆசிரியை ரோகிணி தொடங்கிவைத்தாா். 18 அணிகள் பங்கேற்றன. ... மேலும் பார்க்க

தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய போதை ஒழிப்பு பேரணி

பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்மாதிரி முஸ்லிம் இளைஞா்கள் என்ற செயல் திட்டம் அடிப்படையில் அந்த அமைப்பின் பேட்டை கிளை சாா... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு

திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா். திருநெல்வேலி நகரம், முத்துராமலிங்கபுரம், வயல் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் இசக்கிராஜா (19) ... மேலும் பார்க்க