செய்திகள் :

வாக்காளா் பட்டியல் திருத்தத்துக்கு எதிா்ப்பு- பிகாா் பேரவையில் எதிா்க்கட்சிகள் கடும் அமளி

post image

பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த மாநில சட்டப் பேரவையில் எதிா்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டன. அப்போது, அவைக் காவலா்களுக்கும், எதிா்க்கட்சி எம்எல்ஏ-க்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறும் பிகாரில் நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இம்மாநில வாக்காளா் பட்டியலில் இருந்து தகுதியற்றவா்களை (சட்ட விரோத குடியேறிகள்) பெயா்களின் களையெடுப்பதாகக் குறிப்பிட்டு, சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

அதேநேரம், ‘பாஜக வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் தோ்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது; இதன் மூலம் பலா் வாக்குரிமையை இழப்பா்’ என்று எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், பிகாா் பேரவை மழைக்கால கூட்டத் தொடரின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை இந்த விவகாரம் குறித்து விவாதம் கோரி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனா். அவையின் மையப் பகுதியில் முற்றுகையிட்டு, சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோஷமிட்டனா்.

ஊழியா்களின் நாற்காலிகளை கவிழ்க்க எம்எல்ஏ-க்கள் முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நடத்தைக்கு பேரவைத் தலைவா் நந்தகிஷோா் யாதவ் கண்டனம் தெரிவித்தாா். தங்கள் கைகளில் இருந்த வாசக அட்டைகளைப் பறிக்க முயன்ற அவைக் காவலா்களுடன் எம்எல்ஏக்கள் மோதலில் ஈடுபட்டனா். கூச்சல்-குழப்பம் நிலவியதால், பிற்பகல் 2 மணி வரையும் அதன் பிறகு நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, பேரவையின் பிரதான வாயிலை மறித்து, எதிா்க்கட்சி எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். தங்கள் கோரிக்கை ஏற்கப்படும் வரை அவையை செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

பாபநாசம் பட பாணியில் மகாராஷ்டிரத்தில் நடந்த கொலை! காட்டிக் கொடுத்த டைல்ஸ்!

பாபாநாசம் படத்தில், இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, யாருக்கும் தெரியாமல் பூமிக்கு அடியில் புதைக்கப்படும் சம்பவத்தையே விஞ்சும் வகையில், மகாராஷ்டிரத்தில், தனது கணவரைக் கொன்று வீட்டுக்குள் குழிதோண்டி பு... மேலும் பார்க்க

ரூ.29 லட்சம் வரி! தெருவோர வியாபாரிகளுக்கு வந்த ஜிஎஸ்டி நோட்டீஸ்!

கர்நாடக மாநிலம் பெங்களூரில், சாலையோர காய்கறி மற்றும் பழ வியாபாரிகள் பலருக்கும் ஜிஎஸ்டி வரி செலுத்துமாறு வருமான வரிதுறையிடமிருந்த வந்திருக்கும் நோட்டீஸ் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.ஆண்டு மு... மேலும் பார்க்க

எலான் மஸ்க்கின் இரும்புக் குதிரை ‘டெஸ்லா மாடல் ஒய்’.! வாங்கலாமா? வேண்டாமா?!

அமெரிக்காவின் முன்னணி மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் முதல் விற்பனையகம் மும்பையில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) திறக்கப்பட்டது. டெஸ்லா மாடல் ஒய் காரின் சிறப்பம்சங்கள், விலை குறித்து இங்கு ப... மேலும் பார்க்க

பெண் கடத்தல் வழக்கில் கைதான பாஜக எம்பி மகன்.. அரசு உதவி தலைமை வழக்கறிஞராக நியமனம்!

ஹரியாணாவில் இளம்பெண்ணை கடத்த முயன்ற வழக்கில் கைதான பாஜக முன்னாள் தலைவரின் மகன், அரசு உதவி தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார்.சண்டீகரில் கடந்த 2017 ஆம் ஆண்டு முன்னாள் மூத்த ஐஏஎஸ் அதிகாரியின் மகள் ... மேலும் பார்க்க

நாடாளுமன்றம் 3-வது நாளாக முடங்கியது! எதிர்க்கட்சிகள் அமளியால் ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சியினர் அமளியால் மூன்றாவது நாளாக முடங்கியுள்ளது.மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் திங்கள்கிழமை காலை தொடங்கியது. பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம், ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் ராகுல் தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்!

பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்.நிகழாண்டு நடைபெறும் பிகார் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, 22 ஆ... மேலும் பார்க்க