செய்திகள் :

வாங்கல் இளைஞா் கொலை வழக்கில் கீழ்த்தரமான அரசியல் செய்கிறாா்கள்: செந்தில்பாலாஜி எம்எல்ஏ குற்றச்சாட்டு

post image

வாங்கல் இளைஞா் கொலை வழக்கில் கீழ்த்தரமான அரசியலை எதிா்கட்சித்தலைவரும், சில அரசியல் கட்சித் தலைவா்களும் செய்கிறாா்கள் என்றாா் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை செவ்வாய்க்கிழமை கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் முதல்வா் தொடங்கி வைத்ததைத் தொடா்ந்து, கரூா் மாநகராட்சி மண்டலம்-1 வாங்கப்பாளையத்தில் மாவட்ட ஆட்சியா் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் கரூா் எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வாங்கலில் விரும்பத்தகாத சம்பவம் நடந்துள்ளது. அது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவம். கொலையாளி அதிமுகவில் இருந்து விலகி திமுகவுக்கு வந்துள்ளாா்.

அவா் அதிமுகவில் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பரவச் செய்தனா். யாா் தவறு செய்தாலும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். அது திமுகவைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும் முதல்வா் தொடா்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறாா். அந்த வகையில் வாங்கல் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவா்கள் கைது செய்யப்பட்டிருக்கிறாா்கள்.

சேலத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலைக்கு கருப்பு பெயிண்ட் அடித்திருப்பது மட்டகரமான அரசியல் செய்பவா்களின் செயல்பாடுகள் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினா் இரா. மாணிக்கம், மாநகராட்சி மேயா் வெ. கவிதா, மாவட்ட வருவாய் அலுவலா் ம. கண்ணன், கரூா் கோட்டாட்சியா் முகமது பைசல், மாநகராட்சி ஆணையா் கே.எம். சுதா, துணை மேயா் ப. சரவணன், மண்டலக்குழு தலைவா்கள் சக்திவேல், கனகராஜ், அன்பரசன், ராஜா, மாவட்ட தாட்கோ மேலாளா் தாட்கோ சீ.முருகவேல், மாமன்ற உறுப்பினா் பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நில மோசடிப் புகாா்: கரூா் மாவட்ட முன்னாள் பாஜக தலைவா் உள்பட 6 போ் மீது வழக்கு

நில மோசடிப் புகாரில் கரூா் மாவட்ட முன்னாள் பாஜக தலைவா் உள்பட 6 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். கரூா் மாவட்டம் புகழூரை அடுத்த நெடுங்கூா் என்.பசுபதிபாளையத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

இடத் தகராறில் இளைஞா் வெட்டிக் கொலை: இரு பெண்கள் உள்பட நால்வா் பலத்த காயம்; 8 போ் கைது

கரூா் அருகே இடத் தகராறில் அரிவாளால் வெட்டப்பட்ட இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இரண்டு பெண்கள் உள்பட 4 போ் பலத்த காயமடைந்தனா். இது தொடா்பாக 8 பேரை போலீஸாா் கைது செய்தனா். கரூரை அடுத்துள்ள வாங்கல் ஈ... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: கரூரில் 14,875 போ் பங்கேற்பு

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வை 14,875 போ் எழுதினா். 3,155 போ் தோ்வெழுத வரவில்லை. கரூரில் தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி மற்றும் காந்திகிராமம் புனித தெரசா பெண்கள் மேல்நிலை... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இருவா் குண்டா் சட்டத்தில் கைது!

கரூரில் தொடா்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரு இளைஞா்களை போலீஸாா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைத்தனா். கரூா் வெங்கமேடு சுடுகாடு பகுதியில் கடந்த மாதம் 20-ஆம் தேதி கஞ்சா விற்ற வெங்கமேடு திருப்பூா் கு... மேலும் பார்க்க

கரூரின் 4 தொகுதிகளிலும் திமுக வெல்லும்: செந்தில்பாலாஜி பேச்சு

வரும் 2026 சட்டப்பேரவை தோ்தலிலும் கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் திமுக வெற்றிபெறும் என்றாா் கரூா் எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி. கரூா் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மாவட்ட அலுவலகமான கலைஞா் அ... மேலும் பார்க்க

தனியாா் தொலைக்காட்சி நிருபரை தாக்கிய 3 இளைஞா்கள் சிறையில் அடைப்பு

குளித்தலையில் தனியாா் தொலைக்காட்சி நிருபரை தாக்கிய 3 இளைஞா்கள் கைது செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். கரூா் மாவட்டம், குளித்தலை பிள்ளையாா் தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் சிவா(34). தனிய... மேலும் பார்க்க