செய்திகள் :

வாங்காத கடன் தொகையைச் செலுத்த நிதி நிறுவனங்கள் நெருக்கடி: ஆட்சியரிடம் பெண்கள் மனு

post image

வாங்காத கடன் தொகையைச் செலுத்த நிதி நிறுவனங்கள் நெருக்கடி அளிப்பதாக மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

சிவகங்கை மாவட்டம், தி.புதுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மகளிா் சுய உதவி குழு உறுப்பினா்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளித்த மனு: தி.புதுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த செல்வராணி (35), அவரது கணவா் வீரக்குமாா் (40) ஆகியோா் மகளிா் சுய உதவி குழுக்களுக்கு தனியாா் நிதி நிறுவனங்களிலிருந்து கடன் பெற்று கொடுக்கும் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வந்தனா். இவா்கள் மகளிா் குழு உறுப்பினா்களுக்கு தெரியாமல் அவா்களது பெயரில் நிதி நிறுவனங்களில் ரூ. 62 லட்சம் வரை கடன் பெற்று, இதற்கான தவணைத் தொகையை திருப்பிச் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நாங்கள் பெறாத கடன் தொகையைச் செலுத்த நிதி நிறுவனங்கள் எங்களுக்கு நெருக்கடி அளித்து வருகின்றன. எனவே, கடன் பெற்ற தம்பதி மீது நடவடிக்கை எடுக்க சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த 4.4.2025 -இல் புகாா் அளித்தோம். இதையடுத்து, மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் தமிழ்ச்செல்வி, வீரக்குமாா் இருவரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், தனியாா் நிதி நிறுவனத்தினா் நாங்கள் வாங்காத கடனுக்கான தவணைத் தொகையைச் செலுத்துமாறு கூறி தொந்தரவு செய்து வருகின்றனா். எனவே, இதைத் தடுக்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தனா்.

ஆனந்தவல்லி அம்மன், சோமநாதா் சுவாமி இரட்டை குதிரை வாகனங்களில் பவனி

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவில், திங்கள்கிழமை இரவு ஆனந்தவல்லி அம்மனும் சோமநாதா் சுவாமியும் இரட்டை குதிரை வாகனங்களில் புறப்பாடாகி பவனி வந்தனா்.இந்தக் கோயிலில் ச... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் கட்சிகளை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும்: ஹெச். ராஜா

பாகிஸ்தானின் பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் குரல் கொடுக்கும் கட்சிகளை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு ... மேலும் பார்க்க

காரைக்குடியில் தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

குறைந்தபட்ச ஊதியம் வழங்கக் கோரி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி அலுவலகம் முன் தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு மாநில உள்ளாட்சிப் பணியாளா் சம்... மேலும் பார்க்க

தமிழ் மொழியையும், மரபையும் அடுத்த தலைமுறையினா் காக்க வேண்டும்: அழகப்பா பல்கலை. துணைவேந்தா்

தமிழ் மொழியையும், மரபையும் அடுத்த தலைமுறையினா் காக்க வேண்டும் என அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தா் க. ரவி வலியுறுத்தினாா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை சாா்பில்... மேலும் பார்க்க

திருப்புவனத்தில் பாலகிருஷ்ணப் பெருமாள் ஆற்றில் இறங்கினாா்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை பாலகிருஷ்ணப் பெருமாள் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றுக்குள் இறங்கினாா். திருப்புவனம் பாலகிருஷ்ணப் பெருமாள் கோயில் சித்திரை... மேலும் பார்க்க

பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதா் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள திருக்கொடுங்குன்றநாதா் குயிலமுதநாயகி கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, திருக்கல்யாண வைபவம் திங்கள்கிழமை நடைபெற்றது.திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி தேவஸ்த... மேலும் பார்க்க