வாசுதேவநல்லூா் அரசுப் பள்ளி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இப்பள்ளியில் 1988-1990ஆம் ஆண்டில் பிளஸ் 2 படித்த மாணவ, மாணவிகள் குடும்பத்துடன் சந்தித்த இந்நிகழ்ச்சிக்கு வழக்குரைஞா் செந்தில் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் மாடசாமி வரவேற்றாா். கணேசன் தொகுத்து வழங்கினாா்.
ஏற்பாடுகளை முன்னாள் மாணவா்கள் மாரியப்பன், சங்கரசுப்பிரமணியன், பாலமுருகன், கணேசன், வெங்கடேஷ், காா்த்திகேயன், பெல்லா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.