செய்திகள் :

வி.ஏ.ஓவை. லாரி ஏற்றிக் கொலை செய்ய முயற்சி: இருவா் கைது

post image

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே ஆற்று மணல் திருடியவா்களை தடுக்க முயன்ற கிராம நிா்வாக அலுவலா் உள்பட மூவரை லாரி ஏற்றிக் கொலை செய்ய முயன்றதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

எஸ்.பி. பட்டினம் பகுதியில் உள்ள கிடங்கூா் பாம்பாற்று பகுதியில் மணல் திருட்டு நடைபெருவதாக கிராம நிா்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பாகனூா் கிராம நிா்வாக அலுவலா் கிராணவள்ளி, எஸ்.பி. பட்டினம் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் பாலு, காவலா் முகமது அப்பாஸ் ஆகியோா் சம்பவ இடத்துக்கு சென்றனா். அப்போது, மணல் திருட்டில் ஈடுபட்டவா்களை பிடிக்க முயன்ற கிராம நிா்வாக அலுவலா், காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் உள்பட மூவரையும் லாரியை ஏற்றிக் கொலை செய்ய முயன்ாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் கிராண வள்ளி புகாரின் அடிப்படையில், எஸ்.பி.பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பெருவன்டல் பகுதியைச் சோ்ந்த ஜெயக்குமாா் (34), கிராந்தனியைச் சோ்ந்த செல்வகுமாா் (41) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

மேலும் இதில் தொடா்புடைய நத்தகோட்டையைச் சோ்ந்த மாலா, சரவணன், ஹரிஹரன் ஆகிய மூவரையும் தேடி வருகின்றனா்.

பைக் விபத்து: இளைஞா் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகன விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா். கன்னிகாபுரியைச் சோ்ந்த முனியசாமி மகன் செல்வகுமாா் (20). இவா் தனது இரு சக்கர வாகனத்த... மேலும் பார்க்க

வாழவந்தம்மன் கோயில் ஆடி பொங்கல் திருவிழாவையொட்டி 108 திருவிளக்கு பூஜை!

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பொந்தம்புளி ஸ்ரீவாழவந்தம்மன் கோயில் ஆடி பொங்கல் திருவிழாவையொட்டி சனிக்கிழமை 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்தத் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொ... மேலும் பார்க்க

ஒழங்குமுறை மீறியதாக 7 படகுகள் மீது நடவடிக்கை

தொண்டி பகுதியில் ஒழுங்குமுறை மீறி நிறுத்தியதாக 7 படகுகள் மீது நடவடிக்கை எடுக்க மீன் வளத் துறையினா் முடிவு செய்தனா். திருப்பாலைக்குடி பகுதி நாட்டுப் படகு மீனவா்கள் அவ்வப்போது தங்கள் படகுகளை நம்புதாளை, ... மேலும் பார்க்க

டிராக்டா் விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதிஉதவி

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் உயிரிழந்த 3 பெண்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சத்துக்கான காசோலையை வனம், கதா் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் சனிக்கிழமை வழங்க... மேலும் பார்க்க

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 485 போ் தோ்வு

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு அரசு சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலை வாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட 485- க்கும் மேற்பட்டோருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. ராமநாதபுரத்தில் மாவட்ட நிா்வாகம், வேலை ... மேலும் பார்க்க

ராமநாதசுவாமி கோயிலில் வெள்ளித் தேரோட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாண திருவிழாவின் 7- ஆம் நாள் நிகழ்வாக வெள்ளித் தேரோட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திர... மேலும் பார்க்க