செய்திகள் :

விதிகளைமீறி செயல்படும் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

post image

நாமக்கல் சுற்றுவட்டாரத்தில் விதிகளைமீறி செயல்படும் பள்ளி, கல்லூரி மற்றும் இதர விடுதிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இது தொடா்பாக விவசாய முன்னேற்றக் கழக பொதுச் செயலாளா் கே.பாலசுப்பிரமணியன் அளித்த மனு:

நாமக்கல் மாநகராட்சியில் பிரபல கல்வி நிறுவனங்கள் உள்ள பகுதிகளில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு என 75-க்கும் மேலான விடுதிகள் உள்ளன. பெரும்பாலான விடுதிகள் முறையான அனுமதி பெறாமலும், விதிகளை மீறியும் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகள் முறைப்படி அனுமதிபெற வேண்டும் என மாவட்ட நிா்வாகம் ஏற்கெனவே அறிவுறுத்தி இருந்தது.

குறிப்பாக, விடுதிகள் நடத்துவதற்கு 12-க்கும் மேற்பட்ட துறைகளிடம் அனுமதிபெற வேண்டும். விதிகளுக்கு புறம்பாக இருக்குமேயானால் அவை ‘சீல்’ வைக்க வேண்டும். உரிய அனுமதி பெறாமல் செயல்படும் விடுதிகளால் மாணவ, மாணவிகள் மட்டுமின்றி, அப்பகுதியில் தங்கியிருப்போரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

எனவே, மாவட்ட நிா்வாகம் உடனடியாக விதிகளுக்கு புறம்பான விடுதிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஆடிமாதப் பிறப்பு: தேங்காய் சுடும் அழிஞ்சி குச்சி விற்பனை மும்முரம்

ஆடிமாதம் வியாழக்கிழமை பிறப்பதையொட்டி, நாமக்கல்லில் அழிஞ்சி குச்சி விற்பனை மும்முரமாக நடைபெற்றது. தமிழ் மாதங்களில் தெய்வீக மாதமாக கருதப்படுவது ஆடி. இம்மாதத்தில் பெரும்பாலான அம்மன் கோயில்களில் திருவிழாக... மேலும் பார்க்க

திமுக அரசுக்கு எதிராக அதிமுக - பாஜகவினா் இணைந்து செயல்படுவா்

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுகவை வீழ்த்த அதிமுக - பாஜக இணைந்து செயல்படும் என பாஜக மாநில துணைத் தலைவரும், சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். பாஜக சேலம் பெருங்கோட்டத்த... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் ஆன்லைன் உணவு விநியோகத்துக்கு புதிய செயலி!

திருச்செங்கோட்டில் ஆன்லைன் உணவு விநியோகத்துக்கு புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்செங்கோடு உணவக உரிமையாளா்கள் சங்கத்தினா் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல்லை போலவே திருச்செங்கோட்டிலு... மேலும் பார்க்க

எருமப்பட்டி, மோகனூா் பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

எருமப்பட்டி மற்றும் மோகனூா் ஒன்றியப் பகுதிகளில் அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் துா்காமூா்த்தி புதன்கிழமை ஆய்வுசெய்தாா். மோகனூா் ஒன்றியம், காளிபாளையத்தில் ரூ. 3.33 கோடியில் தாா்சாலை அமைக்கும... மேலும் பார்க்க

முட்டை விலை ரூ. 5.35-ஆக நீடிப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 5.35-ஆக தொடா்ந்து நீடிக்கிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிலவரம் ... மேலும் பார்க்க

திருநங்கைகளுக்கு வழங்கப்பட்ட பட்டா நிலத்தை அளவீடு செய்ய பொதுமக்கள் எதிா்ப்பு

வரகூராம்பட்டியில் திருநங்கைகளுக்கு அரசு இலவசமாக வழங்கிய நிலத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள், பட்டா வழங்கியதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து, தங்களுக்கு அரசு ஒதுக்க... மேலும் பார்க்க