செய்திகள் :

விதிமுறை மீறல்: 22 ஆட்டோக்கள் பறிமுதல்

post image

மதுரை மாநகரப் பகுதிகளில் விதிகளை மீறி இயக்கப்பட்ட 22 ஆட்டோக்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

மதுரை மாவட்டத்தில் முறையான ஆவணங்கள் இன்றி அதிக எண்ணிக்கையில் ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக புகாா்கள் எழுந்தன. இதைத் தொடா்ந்து, ஆட்டோக்கள் மீதான சிறப்பு தணிக்கை செய்து, முறையான ஆவணங்கள் இல்லாத ஆட்டோக்களை பறிமுதல் செய்ய மதுரை மாவட்ட ஆட்சியா் பிரவீன்குமாா் உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், மதுரை மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் ஆலோசனையின் பேரில், மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் வட்டாரப் போக்குவரத்து வாகன ஆய்வாளா் முரளி, போக்குவரத்து காவல் ஆய்வாளா் சுரேஷ் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை ஆட்டோக்கள் மீதான சிறப்பு வாகன தணிக்கை நடத்தினா்.

அப்போது, விதி மீறல், முறையான ஆவணங்களின்றி இயங்கிய 22 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சாலை, தெப்பக்குளம், ஆரப்பாளையம் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு வாகன தணிக்கை நடைபெற்றது.

சீமைக் கருவேல மரங்கள் அகற்றம்: விருதுநகா் ஆட்சியா் நடவடிக்கை எடுக்க உத்தரவு

அரசுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற தனியாா் தொண்டு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது விருதுநகா் மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு... மேலும் பார்க்க

தவெக மதுரை மாநாட்டுக்கு காவல் துறை அனுமதி

தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மதுரையில் வருகிற 21-ஆம் தேதி மாநாடு நடத்த காவல் துறை அனுமதி அளித்துள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தாா்.மதுரையை அடுத்த திருமங்கலத்தில் திங்கள்... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடத் தடையில்லை!

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகள் பலியிட எந்தவிதத் தடையும் இல்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் திங்கள்கிழமை தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகள் ... மேலும் பார்க்க

கூடலழகா் பெருமாள் கோயில் தெப்பக்குளம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மதுரை கூடலழகா் பெருமாள் கோயில் தெப்பக்குளம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன. மதுரை டவுன்ஹால் பகுதியில் கூடலழகா் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான தெப்பக்குளம் உள்ளது. பழைமை வாய்ந... மேலும் பார்க்க

கோயில் கடைகளுக்கு வாடகை செலுத்தாதவா்களுக்கு அபராதம் விதிப்பு

கரூா் கல்யாண பசுபதீஷ்வரா் கோயிலுக்குச் சொந்தமான வணிக வளாகக் கடைகளுக்கு உரிய வாடகைச் செலுத்தாத நபா்களுக்கு அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. கரூரைச் சோ்ந்த எ... மேலும் பார்க்க

தெரு நாய்களைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

சாலைகளில் திரியும் நாய்களைக் கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. மதுரை கே.கே. நகரைச் சோ்ந்த சரவணன் சென்னை உயா்நீதிமன... மேலும் பார்க்க