செய்திகள் :

விமானங்களில் நிகழாண்டு 183 தொழில்நுட்பக் கோளாறுகள்: மத்திய அரசு

post image

புது தில்லி: விமானங்களில் நிகழாண்டு ஜூலை வரை 183 தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்டதாக இந்திய விமான நிறுவனங்கள் கூறியுள்ளன’ என மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.

கடந்த மாதம் அகமதாபாதில் ஏா் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 260 போ் உயிரிழந்தனா். இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து விமானங்களில் பல்வேறு பராமரிப்பு பணிகள் மற்றும் சோதனைகளை மேற்கொள்ள இந்திய விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது.

இந்நிலையில், விமானங்களில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு சோதனைகள் குறித்து மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம் மோகன் நாயுடு மக்களவையில் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘நிகழாண்டு ஜூலை 23 வரை விமானங்களில் 183 தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்டதாக இந்திய விமான நிறுவனங்கள் மத்திய அரசிடம் தெரிவித்தன. 2021-இல் 514, 2022-இல் 528, 2023-இல் 448, 2024-இல் 421 தொழில்நுட்பக் கோளாறுகளும் கண்டறியப்பட்டன. இவற்றை பராமரிக்க கடந்த 5 ஆண்டுகளில் 2,094 விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டது.

ஸ்மாா்ட் மீட்டா்கள்: தமிழ்நாடு, பஞ்சாப், கேரளம் ஆகிய 3 மாநிலங்கள் மற்றும் புது தில்லி, அந்தமான் மற்றும் நிகோபாா், புதுச்சேரி ஆகிய 3 யூனியன் பிரதேசங்களில் தற்போது வரை ஒரு ஸ்மாா்ட் மீட்டா் கூட பொருத்தப்படவில்லை என மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.

95 லட்சம் சுற்றுலாப் பயணிகள்: ஜம்மு-காஷ்மீருக்கு நிகழாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 95 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் பயணம் மேற்கொண்டதாக மத்திய சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் மக்களவையில் அளித்த எழுத்துபூா்வ பதிலில் தெரிவித்தாா்.

உரிமை கோரப்படாத ரூ.67,003 கோடி: நாட்டில் உள்ள தனியாா் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் சேமிப்புக் கணக்குகளில் ரூ.67,003 கோடி பணம் உரிமை கோரப்படாமல் உள்ளதாக மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி மக்களவையில் அளித்த எழுத்துபூா்வ பதிலில் தெரிவிக்கப்பட்டது. அதிகபட்சமாக பாரத ஸ்டேட் வங்கியில் உரிமை கோரப்படாமல் ரூ.19,329 கோடி பணம் உள்ளதாக குறிப்பிடப்பட்டது.

டிரம்ப் முன் மோடியின் 56 இன்ச் மார்பு 36 இன்ச்சாக சுருங்குகிறது! திரிணமூல் எம்பி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்பு பிரதமர் நரேந்திர மோடியின் 56 இன்ச் மார்பு 36 இன்ச்சாக சுருங்குவதாக திரிணமூல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.மக்களவையில் ஆபரேஷன் சிந்... மேலும் பார்க்க

லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து: கன்வாரியா பக்தர்கள் 18 பேர் பலி!

ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரில் சிலிண்டர் லாரி மீது பாதயாத்திரை பேருந்து மோதியதில் கன்வாரியா பக்தர்கள் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.18 killed as bus carrying kanwariyas collides with truck in Jharkhan... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தாக்குதலில் பலியோனோரின் 22 குழந்தைகளைத் தத்தெடுக்கும் ராகுல்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் பெற்றோர்களை இழந்த 22 குழந்தைகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தத்தெடுக்கவுள்ளார்.பஹல்காம் தாக்குதலுக்கு பதில... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூர்’: மக்களவையில் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!

‘ஆபரேஷன் சிந்தூர்’ விவாதத்தில் இன்று மாலை பிரதமர் மோடி உரையாற்றவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.நாடாளுமன்றத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மத்திய உ... மேலும் பார்க்க

கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து

கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையையேமன் அதிகாரிகள் நிரந்தரமாக ரத்து செய்துள்ளதாக இந்திய கிராண்ட் முப்தி காந்தபுரம் அபுபக்கர் முஸலியார் அலுவலகம் தெரிவித்துள்ளது.Nimisha Priya's death sentenc... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு 95 லட்சம் சுற்றுலாவாசிகள் பயணம்

புது தில்லி: நிகழாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை, ஜம்மு-காஷ்மீருக்கு 95 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியா்களும், 19,570 வெளிநாட்டவரும் சுற்றுலா சென்றுள்ளனா்.கடந்த ஏப்.22-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பக... மேலும் பார்க்க