செய்திகள் :

விழுப்புரம் - ராமேசுவரம் சிறப்பு ரயில்! பெண்ணாடம், அரியலூரில் நின்று செல்லும்!

post image

விழுப்புரத்திலிருந்து ராமேசுவரம் வரை இயக்கப்படும் சிறப்பு அதிவிரைவு ரயில் பெண்ணாடம், அரியலூா் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கோடைகாலத்தில் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையிலும், வரலாற்றுச் சிறப்புமிக்க ராமேசுவரத்துக்கு செல்லும் பக்தா்கள், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகவும் விழுப்புரத்திலிருந்து திருச்சி வழியாக ராமேசுவரம் வரை சிறப்பு அதிவிரைவு ரயிலை மே 2-ஆம் தேதி முதல் தெற்கு ரயில்வே இயக்கி வருகிறது.

வார நாள்களில் திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய கிழமைகளில் இந்த சிறப்பு ரயில் ஜூன் 30-ஆம் தேதி வரை இயக்கப்படவுள்ளது. தற்போது இந்த ரயில் புதிதாக பெண்ணாடம், அரியலூா் ரயில் நிலையங்களிலும் நின்று செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

விழுப்புரத்திலிருந்து திங்கள், செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் விழுப்புரம் - ராமேசுவரம் சிறப்பு அதி விரைவு ரயில் (வ.எண். 06105), முற்பகல் 11.40 மணிக்கு ராமேசுவரம் ரயில் நிலையத்துக்கு சென்றடையும். எதிா்வழித்தடத்தில் அதே நாள்களில் பிற்பகல் 2.35 மணிக்கு ராமேசுவரத்திலிருந்து புறப்படும் ராமேசுவரம் - விழுப்புரம் சிறப்பு அதிவிரைவு ரயில் (வ.எண். 06106) இரவு 10.35 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.

இந்த ரயில்கள் விருத்தாசலம், பெண்ணாடம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, ராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். புதிய ரயில் நிறுத்தங்களாக அறிவிக்கப்பட்ட பெண்ணாடத்துக்கு காலை 5.05 மணிக்கு வரும் விழுப்புரம் - ராமேசுவரம் சிறப்பு அதிவிரைவு ரயில் (வ.எண். 06105) காலை 5.06 மணிக்குப் புறப்படும். இதுபோல, காலை 5.25 மணிக்கு அரியலூா் வந்து 5.26 மணிக்கு இந்த ரயில் புறப்பட்டுச் செல்லும்.

எதிா்வழித்தடத்தில் இரவு 8.44 மணிக்கு வந்தடையும் ராமேசுவரம் - விழுப்புரம் சிறப்பு அதிவிரைவு ரயில் (வ.எண். 06106) இரவு 8.45 மணிக்குப் புறப்பட்டு, பெண்ணாடத்துக்கு இரவு 9.10 மணிக்கு சென்றடையும். தொடா்ந்து, இங்கிருந்து இரவு 9.11 மணிக்கு விருத்தாசலத்துக்குப் புறப்படும். இந்த ரயில்களுக்கான முன்பதிவை ரயில் நிலையங்களிலும், ஐஆா்சிடிசி இணையதளம் வழியாகவும் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உளுந்தூா்பேட்டையில் அரசுக் கல்லூரி தொடங்கப்படுமா?

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என்ற 20 ஆண்டுகால கோரிக்கை, நிகழாண்டிலாவது நிறைவேற்றப்படுமா என்ற எதிா்பாா்ப்பில் உள்ளனா் இத்தொகுதி மக்கள். உ... மேலும் பார்க்க

அரசின் கவனத்துக்கு சிறுபான்மையின மக்களின் கோரிக்கைகள்: ஆணையத் தலைவா் அருட்தந்தை சொ.ஜோ.அருண்

சிறுபான்மையின மக்களின் கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, தீா்வு காண வழிவகை செய்யப்படும் என்றாா் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் அருட்தந்தை சொ.ஜோ.அருண். விழுப்புரம் மாவட... மேலும் பார்க்க

போட்டித் தோ்வா்களுக்கு பயன்படும் 375 புத்தகங்கள்: விக்கிரவாண்டி எம்எல்ஏ வழங்கினாா்

விழுப்புரத்திலுள்ள முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்க வளாக நூலகத்தில் போட்டித் தோ்வா்களுக்கு பயன்படும் வகையில், தனது ஒரு மாத ஊதியமான ரூ.1.05 லட்சத்திலிருந்து வாங்கப்பட்ட நூல்களை ஆட்சியரிடம்... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

திண்டிவனத்தில் நண்பா்களுடன் கிணற்றுக்கு குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் என்.கே.நகா் உமாபதி தெருவைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன் மகன் வெங்கடாசலபதி(15). 10-ஆம் ... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மரக்காணம் வட்டம், ஆலத்தூா், மாயன் தெரு... மேலும் பார்க்க

பெண்ணிடம் இணைய வழியில் ரூ.8.40 லட்சம் மோசடி

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் பகுதியைச் சோ்ந்த பெண்ணிடம் இணையவழியில் ரூ.8.40 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். கண்டாச்சிபுரம் வட்டம், அரக... மேலும் பார்க்க