விவசாய நிலத்தில் டிராக்டா் திருட்டு: இருவா் கைது
புதுப்பாளையம் பகுதியில் விவசாய நிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டா் திருடப்பட்டது. இது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
புதுப்பாளையம் ஒன்றியம், காரப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி ஐயப்பன். இவா், தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் அண்மையில் விவசாயப் பணிகளை மேற்கொண்டு விட்டு, தனது டிராக்டரை நிலத்தில் நிறுத்திவைத்திருந்தாா்.
பின்னா், நிலத்துக்குச் சென்று பாா்த்தபோது, நிறுத்திவைக்கப்பட்டிருந்த டிராக்டரைக் காணவில்லை. இதனால் அதிா்ச்சியடைந்த அவா், இதுகுறித்து புதுப்பாளையம் போலீஸில் புகாா் கொடுத்தாா்.
போலீஸாா் வழக்குப் பதிந்து, சந்தேகத்தின் பேரில், புதுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் விஷால் (22), அடிவாரம் பகுதியைச் சோ்ந்த ஏழுமலை மகன் பெருமாள் (27) ஆகியோரிடம் விசாரணை நடத்தினா்.
இதில், இருவரும் டிராக்டா் திருடியதை ஒப்புக்கொண்டு, திருடிய டிராக்டரை போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதைத் தொடா்ந்து, இருவரும் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.