செய்திகள் :

விவோ டி 4 வரிசையில் இரு புதிய ஸ்மார்ட்போன்கள்!

post image

விவோ டி4 என்ற மேம்படுத்தப்பட்ட புதிய ஸ்மார்ட்போனை விவோ நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.

ஏற்னெகவே விவோ டி4 மற்றும் விவோ டி4 எக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வரிசையில் இரு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் விவோ நிறுவனம் இந்திய சந்தைகளில் மிகப்பெரிய வணிகத்தைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் புதிய வரத்தாக விவோ டி அல்ட்ரா மற்றும் விவோ டி லைட் என்ற இரு புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகவுள்ளன. இந்தியாவில் ஜுன் மாதம் சந்தைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பம்சங்களாக இதில் என்னென்ன இடம்பெறும் என்பது குறித்து காணலாம்.

சிறப்பம்சங்கள்

விவோ டி அல்ட்ரா மற்றும் விவோ டி லைட் ஸ்மார்ட்போன்கள் மீடியாடெக் டைமன்சிட்டி 9300 ஓஎஸ் அமைப்புடன் வருகின்றன. மேலும், இதனுடன் கட்டாயமாக செய்யறிவு தொழில்நுட்பத் திறனும் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவோ டி3 அல்ட்ரா ஸ்மார்ட்போனானது கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இது விவோ எஸ் 19-ன் மறு உருவாக்கமாக தயாரிக்கப்பட்டது. (இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் மட்டுமே சந்தையில் உள்ளது). டெலிபோட்டோ கேமரா போன்ற சில அம்சங்கள் குறைக்கப்பட்டு இந்தியாவில் அறிமுகமானது.

இதேபோன்று இந்த ஆண்டு விவோ டி அல்ட்ரா அறிமுகமாகிறது. எனினும் இது விவோ எஸ் 20 ப்ரோ வகை ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைக் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024 டிசம்பரில் விவோ எஸ் 20 ப்ரோ சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த கணிப்பின்படி, விவோ டி அல்ட்ரா மற்றும் விவோ டி லைட் ஸ்மார்ட்போன்கள் 6.67 அங்குலத் திரையுடன் 1.5K துல்லியத்தன்மை கொண்டதாக இருக்கும். திரையில் சுமூகமாக இயங்கும் வகையில் 120Hz திறன் கொடுக்கப்படும். இதன் பேட்டரி அம்சமானது, 5500mAh என இருக்கலாம். 90W வேகமாக சார்ஜ் செய்யும் அம்சம் இணைக்கப்படும்.

இதையும் படிக்க | அதீத பேட்டரி திறனுடன் வெளியானது ஐகியூ நியோ 10 ஸ்மார்ட்போன்!

செயில் நிறுவனத்தின் 4-வது காலாண்டு நிகர லாபம் 11 சதவிகிதம் உயர்வு!

புது தில்லி: அரசு பொதுத்துறை நிறுவனமான ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் - (செயில்), மார்ச் உடன் உள்ள காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 11 சதவிகிதத்திற்கும் மேலாக அதிகரித்து ரூ.1,250.98 க... மேலும் பார்க்க

டிவிட்டருக்குச் சென்றவரை ரூ. 853 கோடி கொடுத்து வேலையில் தக்கவைத்துக்கொண்ட கூகுள்!

கூகுள் நிறுவனத்தின் பணியில் இருந்து டிவிட்டருக்கு (எக்ஸ்) மாற முயன்றவரை ரூ. 853 கோடி கொடுத்து (100 மில்லியன் டாலர்) வேலையில் தக்கவைத்துள்ளது கூகுள் நிறுவனம். இவ்வளவு தொகையைக் கொடுத்து வேலையில் தக்க வை... மேலும் பார்க்க

பாட்டா இந்தியாவின் 4-வது காலாண்டு லாபம் 36% சரிவு!

புதுதில்லி: காலணி உற்பத்தி நிறுவனமான பாட்டா இந்தியா தனது இயக்க லாபம் 36 சதவிகிதம் குறைந்து ரூ.37 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.2023-24 நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையான காலகட்டத்தில் நிறுவனமானத... மேலும் பார்க்க

கிரானுல்ஸ் இந்தியாவின் 4-வது காலாண்டு நிகர லாபம் 17% ஆக உயர்வு!

புது தில்லி: மருந்து நிறுவனமான கிரானுல்ஸ் இந்தியா, மார்ச் 31, 2025 உடன் முடிவடைந்த 4-வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம் 17% அதிகரித்து ரூ.152 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.ஹைதர... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இன்று சமமாக முடிவு!

மும்பை: கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தைகளில் எதிர்மறையான போக்கு காரணமாக இன்றைய நிலையற்ற வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு சமமாக முடிந்தது.ஏப்ரல் மாதத்திற்கான தொழில்துறை உற்பத்தி எ... மேலும் பார்க்க

மிகவும் தட்டையாக வெளியாகும் ஐபோன் 17! இந்தியாவில் விலை எவ்வளவு?

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 வரிசை ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளன. இதையொட்டி ஐபோன் 17 வரிசையில் உள்ள ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய ஸ்மார... மேலும் பார்க்க