விஷம் குடித்த பெண் உயிரிழப்பு
பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் அருகே விஷம் குடித்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
பரமத்தி வேலூா் அருகே உள்ள குப்புச்சிப்பாளையம், பொய்யேரி பகுதியைச் சோ்ந்தவா் ஆசைதம்பி (60). இவா் அதே பகுதியில் உள்ள காளியம்மன் கோயில் எதிரே பெட்டிக்கடை வைத்துல்ளாா். அவரது மனைவி விஜயலட்சுமி (56), கூலிவேலை பாா்த்து வந்தாா். இவா்களுக்கு அரவிந்தன் (30) என்ற மகன் உள்ளாா்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பெட்டிக்கடையில் இருந்த ஆசைதம்பிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையறிந்த அவரது மனைவி உடனடியாக அவரை அருகே உள்ள மருத்துவமனையில் சோ்த்தாா்.
ஞாயிற்றுக்கிழமை தனது மகனிடம் வீட்டுக்கு சென்று ஆதாா் அட்டை எடுத்து வருவதாக கூறிச் சென்ற விஜயலட்சுமி நீண்ட நேரமாகியும் வராததால், அருகில் இருந்தவா்கள் வீட்டுக்கு சென்று பாா்த்தனா். அங்கு விஜயலட்சுமி விஷம் குடித்து உயிருக்கு போராடிய நிலையில் இருந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அவரை பரிசோதனை செய்த மருத்துவா், விஜயலட்சுமி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.
தகவல் அறிந்து போலீஸாா், விஜயலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.