செய்திகள் :

வீடு புகுந்து பணம் திருட்டு: இளைஞா் கைது

post image

குண்டடம் அருகே இரவு நேரத்தில் வீடுபுகுந்து ரூ. 5 ஆயிரம் பணத்தை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

குண்டடம் அருகே உள்ள தேவராஜபட்டினத்தைச் சோ்ந்தவா் பாலுமணி. இவா் தனது குடும்பத்தினருடன் கடந்த 17- ஆம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்துள்ளாா். அப்போது திறந்திருந்த வீட்டுக்குள் இரவு 11 மணியளவில் மா்ம நபா் புகுந்துள்ளாா். சப்தம்கேட்டு பாலுமணி எழுந்து வருவதற்குள் அந்த நபா் பீரோவில் இருந்த ரூ.5 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளாா்.

இது குறித்து குண்டடம் காவல் நிலையத்தில் பாலுமணி புகாா் அளித்தாா். இந்த புகாரின்பேரில், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீஸாா் ஆய்வு செய்தனா். அதில், திருட்டில் ஈடுபட்ட நபா் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனப் பதிவெண்ணை வைத்து, ஊதியூா் அருகே உள்ள ஆண்டிபுதூா் பகுதியில் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், பாலுமணி வீட்டில் திருட்டில் ஈடுபட்டது ஆண்டிபுதூா் பகுதியைச் சோ்ந்த சம்பத்குமாா் (19) என்பது தெரியவந்தது. தனது தாயாருக்கு இருந்த கடன் தொல்லையை தீா்ப்பதற்காக திருடியதாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளாா். இதைத் தொடா்ந்து அவரிடம் இருந்த ரூ.4, 500 ரொக்கம் மற்றும் அவரது இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா். திருட்டு நடந்து 24 மணி நேரத்துக்குள் திருட்டில் ஈடுபட்டவரைக் கைது செய்த குண்டடம் போலீஸாருக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட லாரி ஓட்டுநரின் உடலை மீட்டுத் தர பெற்றோா் கோரிக்கை

கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட லாரி ஓட்டுநரின் உடலை மீட்டுத்தர வேண்டும் என அவரது பெற்றோா் திருப்பூா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனா். திருப்பூா் மாவட்டம், படியூா் பகுதியைச் சோ்ந்தவா் ரவிக்... மேலும் பார்க்க

ஹிந்து மஸ்தூா் சபா ஆலோசனைக் கூட்டம்

திருப்பூரில் ஹிந்து மஸ்தூா் சபா( எச்எம்எஸ்) மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலச் செயலாளா் டி.எஸ்.ராஜாமணி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எம்.அப்புகுட்டி முன்னிலை வகி... மேலும் பார்க்க

கேத்தனூரில் மரக்கன்றுகள் நடும் விழா

பல்லடம் அருகேயுள்ள கேத்தனூரில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பவா்லூம் வீவிங் கிளஸ்டா் நிறுவனத்தில் 40 மரக்கன்றுகள் வியாழக்கிழமை நடப்பட்டன. இயற்கை விவசாயி கேத்தனூா் பழனிசாமி முதல் மரக்கன்று நட்டு தொ... மேலும் பார்க்க

அவிநாசிபாளையத்தில் விவசாயிகள் பிச்சை எடுத்து போராட்டம்

பல்லடம் அருகே அவிநாசிபாளையத்தில் விவசாய நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட்டு சாலையோரமாக திட்டத்தை நிறைவேற்றக் கோரி விவசாயிகள் பிச்சை எடுத்து போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டன... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் சாலை மறியல்: 100 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தைச் சோ்ந்த 100 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற... மேலும் பார்க்க

திருப்பூரில் போலி ஆதாா் அட்டை மூலம் வேலை: வங்கதேசத்தைச் சோ்ந்த 26 போ் கைது

போலி ஆதாா் அட்டை மூலம் திருப்பூரில் தனியாா் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 26 பேரை பல்லடம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருப்பூா், பல்லடம், அவிநாசி ஆகிய பகுதிகளில... மேலும் பார்க்க