செய்திகள் :

வெளிநாடு சென்ற எம்பிக்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

post image

வெளிநாடு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் குழு பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்துவருவதை அம்பலப்படுத்தி, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கொள்கையை விளக்கும் நோக்கில், எம்.பிக்கள் குழு 33 நாடுகளுக்குச் சென்றுள்ளது.

அங்கு அந்த நாட்டு மூத்த அரசியல் பிரமுகர்களைச் சந்தித்து, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு, பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து பாகிஸ்தானில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து இந்தியா மேற்கொண்ட தாக்குதல் குறித்து விளக்கி வருகின்றனர்.

இந்தக் குழுவில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் சசி தரூர் (இந்திய தேசிய காங்கிரஸ்), ரவிசங்கர் பிரசாத் (பாஜக), சஞ்சய் குமார் ஜா (ஐக்கிய ஜனதா தளம்), பைஜயந்த் பாண்டா (பாஜக), கனிமொழி (திமுக), சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ்), ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே (சிவசேனை) ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

புதுதில்லியில் பிரதமர் இல்லத்தில் இன்று(ஜூன் 10) இரவு 7 மணியளவில் நடைபெற்றுவரும் கூட்டத்தில் எம்பிக்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

அதன்படி, பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து எம்பிக்கள் ரேகா சர்மா, பாஜகவின் ஃபாங்னான் கோன்யாக்,ரவிசங்கர் பிரசாத், அதிமுகவின் தம்பிதுரை, பிஜு ஜனதா தளத்தின் சஸ்மித் பத்ரா ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் உயர் நிலை சந்திப்புகள், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் எதிர்ப்பு நடவடிக்கைகள், பல்வேறு நாடுகள் தெரிவித்த ஆதரவுகள், நாடுகளுக்கு இடையேயான செயல்திட்ட வியூகங்களின் முடிவுகள் என்னென்ன என்பது குறித்து பிரதமர் மோடி தலைமையில் விவாதிக்கப்படவுள்ளது.

இதையும் படிக்க: விற்கப்படுகிறதா ஆர்சிபி..? ரூ.16,800 கோடிக்கு கைமாற்ற திட்டமிடும் உரிமையாளர்கள்?!

பங்குச்சந்தையில் யுபிஐ பா்வா்த்தனை முறை கட்டாயம் - செபி புதிய உத்தரவு

பங்குச்சந்தையில் நிதி பரிவா்த்தனைகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் யுபிஐ பரிவா்த்தனை முறையைக் கட்டாயப்படுத்தியுள்ளதாக பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) புதன்கிழமை தெரிவித்தது. மும்பையில் இ... மேலும் பார்க்க

இந்திய விமானப்படை, கடற்படை தலைமைத் தளபதிகளுடன் இலங்கை ராணுவத் தளபதி சந்திப்பு

இந்திய கடற்படை தலைமைத் தளபதி தினேஷ் கே.திரிபாதி மற்றும் விமானப்படை தலைமைத் தளபதி ஏ.பி. சிங் ஆகியோருடன் இலங்கை ராணுவத் தளபதி பி.கே.ஜி.எம். லசந்தா ரோட்ரிகோ புதன்கிழமை சந்தித்தாா். இருதரப்பு பாதுகாப்பு உ... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் ரவீந்திரநாத் தாகூரின் இல்லம் மீது தாக்குதல்! விசாரணைக் குழு அமைப்பு!

வங்கதேச நாட்டிலுள்ள நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ரவீந்திரநாத் தாகூரின் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில், விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.வங்கதேசத்தின் சிராஜ்கஞ்ச் மாவட்டத்தில... மேலும் பார்க்க

யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு: 14,161 பேர் தேர்ச்சி!

யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வு நாடு முழுதும் கடந்த மே 25-ஆம் தேதி நடைபெற்றது. மத்திய குடிமைப் பணிகள் தேர்வாணையத்தின் 2025-ஆம் ஆண்டுக்கான முதல் நிலைத் தேர்வில் 14,161 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இவர்கள்... மேலும் பார்க்க

தேனிலவு கொலை: மனைவி உள்பட 5 பேருக்கு போலீஸ் காவல்!

மேகாலயாவுக்கு தேனிலவு சென்றபோது கணவரைக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட மனைவி, அவரது காதலன் உள்பட 5 பேருக்கு போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி - சோ... மேலும் பார்க்க

அமெரிக்காவில் கைவிலங்கிட்டு நாடுகடத்தப்பட்ட இந்திய மாணவர் சட்டவிரோதமாக நுழைந்தவர்!

அமெரிக்காவின் நேவார்க் விமான நிலையத்தில் கைவிலங்கிடப்பட்டு நாடுகடத்தப்பட்ட இந்திய மாணவர் முறையான விசா இல்லாமல் சட்டவிரோதமாக நுழைந்தவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்திய - அமெரிக்க சமூக தொழில்முனைவோ... மேலும் பார்க்க