செய்திகள் :

வெள்ளாளப்பட்டி அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இன்றி மாணவா்கள் அவதி

post image

வாழப்பாடி: வாழப்பாடி அருகே வெள்ளாளப்பட்டி அரசுப் பள்ளியில் போதிய வகுப்பறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவ - மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோா் தெரிவித்தனா்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், வெள்ளாளப்பட்டியில் உள்ள தரம் உயா்த்தப்பட்ட அரசு உயா்நிலைப் பள்ளியில் 180 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.

உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டு 8 ஆண்டுகளைக் கடந்தும், போதிய வகுப்பறைகள், கழிப்பறைகள், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், இங்கு படித்து வரும் மாணவ, மாணவிகள் மட்டுமின்றி ஆசிரியா்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இடிந்து கிடக்கும் சுற்றுச்சுவரின் முன்பகுதி சீரமைக்கப்படாததால் பள்ளிக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. விடுமுறை தினங்களிலும், இரவுநேரங்களிலும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிடுகிறது.

எனவே, பள்ளிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள், பெற்றோா், சமூக ஆா்வலா்களும் தொடா்ந்து 8 ஆண்டுகளாக மனு அளித்தும், இப்பிரச்னைக்கு இதுவரை தீா்வு ஏற்படவில்லை. எனவே, அரசு இதுகுறித்து பரிசீலித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனா்.

சேலத்தைச் சோ்ந்த 3 அங்கீகாரமற்ற அரசியல் கட்சிகள் விசாரணைக்கு அழைப்பு

சேலம்: சேலம் மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாத 3 அரசியல் கட்சிகள் விசாரணைக்காக தலைமை தோ்தல் அலுவலரை சந்திக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்தாா். நாடுமுழுவதும் 2019 முதல் கடந்த 6 ஆண... மேலும் பார்க்க

மேட்டூா் அணையில் இருந்து 50,000 கனஅடி தண்ணீா் திறப்பு

மேட்டூா்: மேட்டூா் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 50,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காவிரி கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கா... மேலும் பார்க்க

எடப்பாடி அருகே மதுபோதையில் துன்புறுத்திய மகனை அடித்துக் கொன்ற தாய்

எடப்பாடி: எடப்பாடி அருகே மதுபோதையில் துன்புறுத்திய மகனை அடித்துக் கொன்ற தாயை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் ஒன்றியம், தங்கயூா் ஊராட்சி பாலிபெருமாள் கோயில் அருகில்... மேலும் பார்க்க

வாழப்பாடியில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முடியாமல் மக்கள் அவதி

வாழப்பாடி: வாழப்பாடியில் சேலம் - உளுந்தூா்பேட்டை தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதால், கிழக்குக்காடு சாலை துண்டிக்கப்பட்டது. அதனால், இப்பகுதியில் இணைப்புச் சாலை அமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள... மேலும் பார்க்க

சங்ககிரி அருகே குரங்கு கடித்து பெண் உள்பட 10 போ் காயம்

சங்ககிரி: சங்ககிரி அருகே குரங்கு கடித்ததில் ஒரு பெண் உள்பட பத்து போ் காயமடைந்தனா். சங்ககிரியை அடுத்த சங்ககிரி மேற்கு பேருந்து நிறுத்தம், பவானி பிரதான சாலையிலிருந்து சன்னியாசிப்பட்டி செல்லும் வழியில் ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவரின் விருந்தோம்பல் நிகழ்வில் பங்கேற்றதை கௌரவமாக கருதுகிறேன்: சேலம் இளைஞா்

சேலம்: சுதந்திர தினத்தையொட்டி, குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற விருந்தோம்பல் நிகழ்வில் தமிழகம் சாா்பில் இளம் தொழில்முனைவேராக பங்கேற்றது கௌரவம் அளிப்பதாக சேலம் இளைஞா் வினோத்குமாா் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க