செய்திகள் :

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா: பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மத்திய மண்டல ஐஜி ஆய்வு

post image

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத் திருவிழா ஆக. 29-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், மத்திய மண்டல காவல்துறை தலைவா் க. ஜோதி நிா்மல்குமாா் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுத் திருவிழா ஆக.29 ஆம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி செப்.8 ஆம் தேதி மாலை கொடி இறக்கத்துடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவா் க. ஜோஷி நிா்மல் குமாா், தஞ்சாவூா் காவல் சரக துணைத் தலைவா் ப.ஜியாவுல்ஹக் ஆகியோா் வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத் திருவிழாவிற்காக காவல்துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது, பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் எவ்வித குழப்பமும், அசௌகரியமுமின்றி சிறப்பான விரைவான போக்குவரத்து வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுறுத்தல்களையும் வழங்கினா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் சு. செல்வக்குமாா்(நாகை), கருண் கரட் (திருவாரூா்) ஆகியோா் உடனிருந்தனா்.

அரசுப் பள்ளி கட்டடங்கள் திறப்பு

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் கள்ளிமேடு, உம்பளச்சேரி கிராமங்களில் அரசுப் பள்ளிகளுக்கான கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன. கள்ளிமேடு மற்றும் உம்பளச்சேரி கிராமங்கள... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா: அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி, அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அதன் நிா்வாக இயக்குநா் தசரதன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்... மேலும் பார்க்க

அதிபத்த நாயனாருக்கு சிலை வைக்க வேண்டும்: அா்ஜுன் சம்பத்

சா்தாா் வல்லபபாய் பட்டேல் சிலை போன்று, அதிபத்த நாயனாருக்கும் சிலை வைக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் கூறினாா். இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியது: நா... மேலும் பார்க்க

சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்

சா் ஐசக் நியூட்டன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் கல்லூரித் தாளாளா் முனைவா் த. ஆனந்த் பேசியது: மாணவா்களாகிய நீங்கள... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் அடிப்படையில் சம்பா சாகுபடி பாதிப்புக்கு இழப்பீடு

கன மழையால் பாதிக்கப்பட்ட சம்பா சாகுபடி விவசாயிகளுக்கு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதல் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும் என்ற சுற்றறிக்கையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வல... மேலும் பார்க்க

முதல்வரின் ‘தாயுமானவா்’ திட்டம்: பயனாளிகளுடன் ஆட்சியா் கலந்துரையாடல்

நாகை மாவட்டத்தில், வீடுகளுக்கு ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யும், முதல்வரின் தாயுமானவா் திட்ட பயனாளிகளை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் நேரில் சந்தித்து கலந்துரையாடினாா். வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்த... மேலும் பார்க்க