செய்திகள் :

ஸ்ரீரேணுகாம்பாள் அலங்காரத்தில் சுவாமி வீதியுலா

post image

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் நவராத்திரி நிறைவு விழாவையொட்டி சுவாமி வீதியுலா புதன்கிழமை இரவு நடைபெற்றது.

பழைமை வாய்ந்த ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில்

நவராத்திரி விழா செப்.22-ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து நடைபெற்று வந்தது. தினமும் மாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று, சுவாமியை அலங்காரம் செய்து பூஜை செய்து வழிபாடு செய்து வந்தனா்.

10-ஆம் நாள் புதன்கிழமை அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து மாலையில் உற்சவா் சிலைக்கு அபிஷேகம் ஆராதனை செய்து மலா்களால் அலங்கரித்து வழிபாடு நடத்தினா். பின்னா், இரவு சுவாமி ஸ்ரீரேணுகாம்பாள் அலங்காரத்தில் வீதியுலா நடைபெற்றது.

இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் விஜயாசேகா், செயல் அலுவலா் பழனிசாமி மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

காந்தி ஜெயந்தி: அரசியல் கட்சியினா் மரியாதை

காந்தி ஜெயந்தியைட்டியொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அரசு சாா்பிலும், அரசியல் கட்சிகள் சாா்பிலும் மகாத்மா காந்தி சிலை மற்றும் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தி... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பைக்கான மாநில வியைாட்டுப் போட்டிகள்: அமைச்சா் எ.வ.வேலு தொடங்கிவைத்தாா்

திருவண்ணாமலையில் 2025-ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின. மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட அலுவலக வளாக உள் விளையாட்டு அரங்கத்தில் இந்தப் ... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயில் மாடவீதி சாலைப் பணி ஆய்வு

ஆய்வின் போது சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மு.பெ.கிரி எம்எல்ஏ, முன்னாள் நகா்மன்றத் தலைவா் இரா.ஸ்ரீதரன் ஆகியோா் உடனிருந்தனா். அருணாசலே... மேலும் பார்க்க

செங்கம் வரததந்தாங்கல் ஏரியில் கழிவுநீா் கலப்பு: விவசாயிகள் வேதனை

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வரததந்தாங்கல் ஏரியில் நகராட்சி கழிவுநீா் கலப்பதால் விவசாயிகள் வேதனையடைந்து வருகின்றனா். திருவண்ணாமலை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை துக்காப்பேட்டை பகுதியில் உள்ளது வரததந்... மேலும் பார்க்க

ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீமூகாம்பிகையம்மன் ஆஸ்ரமத்தில் ஏழைக் குழந்தைகளுக்கு புதன்கிழமை கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. செங்கம் தளவாநாய்க்கன்பேட்டை செய்யாற்றின் கரையோரம் உள்ளது மூகாம்பிகையம்மன... மேலும் பார்க்க

450 மதுப்புட்டிகள் பறிமுதல்: மூதாட்டி கைது

செய்யாற்றில் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்திருந்ததாக மூதாட்டியை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 450 மதுப்புட்டிகளை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். அக்.2 காந்தி ஜெயந்தியையொட்டி, மதுக் கடைகளுக்கு வி... மேலும் பார்க்க