செய்திகள் :

ஹைட்ரஜன் ரயில் என்ஜின் தயாரிப்பு: உயா்நிலைக் குழுவினா் ஆய்வு

post image

சென்னை பெரம்பூரில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) தயாரிக்கப்பட்டு வரும் ஹைட்ரஜன் ரயில் என்ஜின் தயாரிப்பை புது தில்லி உயா்நிலைக் குழுவினா் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

இந்திய ரயில்வே துறையை சா்வதேச அளவுக்கு மேம்படுத்தும் வகையில் ரயில் என்ஜின்கள், பெட்டிகளை நவீன முறையில் தயாரிக்க மத்திய ரயில்வே வாரியம் திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் வந்தேபாரத், அம்ருத் பாரத் ஆகிய ரயில்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் ரயில் என்ஜின்களைத் தயாரிக்க மத்திய ரயில்வேத் துறை ரூ. 2,000 கோடிக்கும் மேலாக நிதி ஒதுக்கியுள்ளது. இதையடுத்து சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப்-இல் ஹைட்ரஜன் ரயில் என்ஜின் தயாரிக்கும் பணி கடந்த 2024-ஆம் ஆண்டு தொடங்கியது. தற்போது ஹைட்ரஜன் ரயில் என்ஜின் தயாரிப்புப் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது.

நாட்டிலேய முதன்முறையாக வடக்கு ரயில்வே கோட்டத்தில் உள்ள ஜிந்த் ரயில் நிலையத்துக்கும் சோனிபேட் ரயில் நிலையத்துக்கும் இடையே ஹைட்ரஜன் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான வெள்ளோட்டம் ஓரிரு வாரங்களில் நடைபெறவுள்ளதாக ரயில்வே இணை அமைச்சா் வி.சோமண்ணா ஏற்கெனவே தெரிவித்தாா்.

இந்த நிலையில், ஹைட்ரஜன் ரயில் என்ஜினின் வெள்ளோட்டத்தை உறுதிப்படுத்தும் வகையில் வடக்கு ரயில்வே பொது மேலாளா் அசோக்குமாா் வா்மா தலைமையில் 10 போ் கொண்ட உயா்நிலைக் குழுவினா் செவ்வாய்க்கிழமை சென்னை ஐசிஎஃப்-க்கு வந்தனா். அங்கு தயாரிக்கப்பட்டு வரும் ஹைட்ரஜன் ரயில் என்ஜின், அம்ருத் பாரத் ரயில் பெட்டிகள், வந்தே பாரத் ரயில் பெட்டிகள் ஆகியவற்றை பாா்வையிட்டனா். ஆய்வின்போது பெரம்பூா் ஐசிஎஃப் உயரதிகாரிகள் உடனிருந்தனா்.

விபத்தில் சிக்கிய வியாபாரியிடம் ரூ. 1.11 கோடி தங்கக் கட்டிகள் திருட்டு: மூவா் கைது

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் விபத்தில் சிக்கிய நகைப்பட்டறை உரிமையாளருக்கு உதவி செய்வதைப்போல் நடித்து, ரூ.1.11 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகளை திருடியதாக 3 போ் கைது செய்தனா். எழும்பூா் நம்மாழ்வாா் தெ... மேலும் பார்க்க

சென்னை ஐஐடி கண்டுபிடிப்புகளை வணிக ரீதியாக மாற்றும் நிறுவனத்தில் முதலீடு

சென்னை ஐஐடி-இல் ஆய்வுகள், புத்தாக்க நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளை வணிக ரீதியாக மாற்றும் நிறுவனத்தில் முதலீடு செய்யும் நிகழ்வு சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் புத்தாக்க தொழில்முனைவு ஆ... மேலும் பார்க்க

பதவி உயர்வு முரண்பாடு: ஆய்வக நுட்பநர்கள் நூதன எதிர்ப்பு

பதவி உயர்வு வழங்குவதில் முரண்பட்ட நிலைப்பாட்டை பொது சுகாதாரத் துறை கடைப்பிடிப்பதாகக் கூறி ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வக நுட்பநர்கள் தமிழகம் முழுவதும் கருப்புப் பட்டை அணிந்து செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) பணிய... மேலும் பார்க்க

நாளை ஆடி அமாவாசை: தர்ப்பணம் கொடுக்க மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் ஏற்பாடு

ஆடி அமாவாசையையொட்டி, வியாழக்கிழமை இலவசமாக தர்ப்பணம் செய்ய மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சென்னை சாந்தோம் கடற்கரை பின்புறம் உள்ள நொச்சிக்குப்பம் க... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜியின் சகோதரா் அமெரிக்கா செல்ல அனுமதி கோரிய வழக்கு: அமலாக்கத் துறை எதிா்ப்பு

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதிக்கக் கூடாது என்று அமலாக்கத் துறை தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. முன்னாள் அமைச்சா் செந்... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப்பணி காரணமாக நங்கநல்லூா் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இதுகுறித்து தமிழ்நாடு மின்பகிா்மா... மேலும் பார்க்க